- Get link
- X
- Other Apps
சீமானின் அபத்த அரசியல் நாடகங்கள்
பெரியாரியவாதிகளுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் அப்படி என்னதான் முரண்பாடு? அடிப்படையே முரண்பாடு தான். சாதியை வைத்து தான் தமிழனா என்று வீரத்தமிழர் முன்னணியினர் கண்டுபிடிக்கிறார்கள்; சாதியை தமிழனின் அடையாளமாக அதாவது தமிழினத்தின் பெருமைப்படத்தக்க இனக்கூறாக பார்க்கிறார்கள். அப்படி சாதியை தமிழனின் அடையாளமாகப் பார்ப்பவர்கள் எப்படி சாதியை ஒழிக்க முன்வருவார்கள்? சாதி ஒழிப்பைப் பற்றி பேசுவார்கள்? என்பதே அடிப்படை முரண்பாடு. (ஆதாரம்: கண்டிநாயக்கர் ஆவணப்படத்தில் தமிழன் தன் பெயருக்குப் பின் இருந்த சாதிப்பட்டத்தை இழந்ததால் தன் அடையாளத்தையும் பெருமையையும் இழந்தான் என்று சொல்கிறார்கள்.)
இப்படி சாதி என்பது தமிழனின் அடையாளமாகவும், தமிழினத்தின் பெருமைப்படும் இனக்கூறாகவும் நாம் தமிழர் கட்சியினர் இப்போது புதிதாக ஒன்றும் பார்க்கவில்லை. முன்பே சொல்லப்பட்டது தான். இதோ ம.பொ.சி சொல்வதை கவனியுங்கள்.
“வருணப் பாகுபாடு முதலில் தமிழர் சமுதாயத்திலிருந்துதான் பிறந்திருக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை. இந்த வருண வேறுபாடு தோன்றிய காலம் தமிழர் வட பாரதத்திலும் வாழ்ந்த காலமாக இருக்கலாம். ஆரியர் எனப்படுவோர் பல நூற்றாண்டுக் காலம் நாடோடிகளாக அலைந்து திரிந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர். நால்வருணப் பாகுபாடு என்பது விஞ்ஞான முறைப்படி மனித சமுதாயத்தின் வளர்ச்சியைக் குறிப்பதாகும்” (ஆதாரம் :தமிழகத்தில் பிறமொழியினர்- ம.பொ.சி - பக்கம்-246)
வீரத்தமிழர் முன்னணியினர் இப்போது சொல்வதை முன்பே சொன்ன ம.பொ.சி வருணப்பாகுபாடு தமிழர் சமுதாயத்திலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்று “சுத்தத் தமிழர்கள்(?)” பார்ப்பனர்களைக் காப்பாற்றுகிறார். அடுத்து இந்திய நிலப்பரப்பில் வாழக்கூடிய பெருவாரியான மக்களை இழிவான நிலையில் வைத்திருக்கும் வருணப் பாகுபாட்டை மனித சமுதாயத்தின் வளர்ச்சியைக் குறிப்பதாக சொல்கிறார். எந்த மனித சமூதாயம் என்று அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பார்ப்பான் தான் மனிதன். அவன் வளர்ச்சியே மனித சமுதாய வளர்ச்சி என்று எண்ணினாரோ என்னவோ?
இந்த சாதி என்பது தமிழரிடம் இருந்து தான் தோன்றியதா? அது தமிழனுக்கும் அடையாளம் தானா? என்ற கேள்விக்கு பெரியார் என்ன சொல்கிறார் என்று
கவனியுங்கள்.
“முதலாவதாக, இந்த சாதி என்னும் சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. சாதிக்கு ஆதாரம் இந்து மதம் என்று சொல்வது. அந்த இந்து மதம் என்ற சொல்லும் தமிழ்ச் சொல் அல்ல; அதற்கு ஆதாரமாக உள்ள வேதமும் மநுதர்மமும் நமக்குச் சம்பந்தப்பட்டவையல்ல. அவைகள் நம் மொழியில் உள்ளவையுமல்ல. நம் மக்களால் எழுதியவையுமல்ல; எப்படியோ அவை நம் தலைக்கு வினையாக வந்து சேர்ந்திருக்கின்றன; ‘இந்து’ என்ற சொல் எந்த மொழியிலும் இல்லை. ஆராய்ச்சிக்காரர்கள் அதை ஒரு நதியின் பெயர் என்கிறார்கள்; சிலர் ஓர் இடத்தில் வாழும் குறிப்பிட்ட மனிதர்களைக் குறிப்பது என்கிறார்கள்: சிலர் ‘பர்சிய’ மொழியில் திருடர்களைக் குறிப்பது என்கிறார்கள். அது மருவி வந்ததென்பார்கள் சிலர்.
மற்றபடி, வருணாசிரம தர்மம் என்னும் சொல்கூடத் தமிழ்ச் சொல் அல்ல. நம்நாட்டில் அந் நியமம் இருந்திருந்தால் நம் மொழியில் அதற்கு வார்த்தை இருந்திருக்கும். சோளம் நம் நாட்டில் விளைகிறது. அதைச் சோளம் என்று சொல்கிறோம். ஆங்கிலேயரும் அதைச் சோளம் என்றே சொல்லுவார்கள் ஏன்? அவர்கள் நாட்டில் அது இருந்ததில்லை. அது போலவே, காப்பியை நம் தமிழ்மக்கள் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு ஒரு பானமாக உபயோகிக்கவில்லை. அதனால், நம் தமிழ்மொழியில் அதற்கு ஒரு பெயரிடுவதற்கில்லாமல் போயிற்று. ஆதலால், நாமும் அதை அந்நிய நாட்டுப் பெயரால் ‘காப்பி’ என்றே அழைக்கின்றோம். ‘வருணாசிரம தர்ம சாதிப் பாகுபாடு’ நம் தமிழ்நாட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே இருந்திருந்தால், நம் மொழியில் அவைகளுக்குத் தனிப் பெயர் இருந்துதானிருக்கும். அன்றியும், இப்பெயர்களையும் இவ் வித்தியாசங்களையும் நாம் ஆதியிலிருந்தே கண்டித்து வந்திருக்கின்றோம் என்பதற்கு அறிகுறிதான் -ஆரியர்களை நாம் ‘மிலேச்சர்கள்” என்று சொல்லுவது. எனவே, இவை ஒழிய வேண்டுமானால், இவ் வாரியத்தன்மை ஒழிய வேண்டும். ஆரிய மதம் ஒழிய வேண்டும். ஆரியக் கொள்கை ஒழிய வேண்டும்.” (ஆதாரம்: சென்னை புரசைவாக்கத்தில் 19-10-1927 இல் பெரியார் சொற்பொழிவு, ‘குடியரசு’ 30-10-1927, பெரியார் சிந்தனைகள்-வே.ஆனைமுத்து, தொகுதி-2, இயக்கங்கள்-1, பக்கம்-708)
மேற்கண்ட பெரியாரின் உரையில் அவர் சொன்ன ‘நம்’ என்பது தமிழர்கள், ‘நம் மொழி’ என்பது தமிழ் மொழியை, ‘நம் நாடு’ என்பது தமிழ்நாட்டை என்பதை வீரத்தமிழர் முன்னணியினர் கவனிக்க வேண்டும்.
மேற் சொன்னதிலிருந்து வீரத்தமிழர் முன்னணியினர் மற்றும் ம.பொ.சி சொல்வது உண்மையா? அல்லது பெரியார் சொல்வது உண்மையா? என்பதை அறிவுள்ள தமிழ் மக்களே ஆய்ந்து பார்க்கட்டும்.
சாதியை ‘சாதி’ என்று மாற்றி விடுவதால் அது தமிழாகி விடாது. தமிழருக்கு உரித்தானதாகவும் ஆகிவிடாது.
தமிழர்களுக்குள் பிரிவினையை சாதியின் மூலம் கொண்டு வந்த ஆரியப் பார்ப்பனர்களை “அவாள் ஆத்துலேயும் தமிழ்தானே பேசுறாள்” என்று தமிழனாக்கி, சாதியை தமிழனுக்கு உரியதாக்கி, ‘தான் சாகும் காலம் வரையிலும் தமிழனின் இழிவுக்குக் காரணமான, தமிழ்த்தேசிய ஓர்மைக்கு முட்டுக்கட்டையாக நிற்கும் சாதியை ஒழிக்கப் போராடிய’ பெரியாரை தமிழினத்தின் மிகப் பெரிய எதிரியாக கட்டமைக்க முற்படுவதை சுத்த அயோக்கியத்தனமின்றி வேறென்ன சொல்வது? பார்ப்ப சேவகமின்றி வேறேன்ன சொல்வது?
சாதியை தமிழனின் அடையாளமாக கருதும் வீரத்தமிழர் முன்னணியினர், அந்த அடையாளத்தை ஒழிக்க காலம் முழுவதும் போராடிய பெரியாரை தமிழினத்தின் மிகப்பெரிய எதிரியாக பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் சாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரே இன்னும் இவர்கள் பார்வையில் ‘நாய்க்கர்’ ஆகத்தான் தெரிகிறார். பல சாதிமறுப்புத் திருமணங்களை செய்து வைத்த தோழர்.கோவை.இராமகிருஷ்ணன் “நாயுடு”வாகத் தெரிகிறார்.
சாதியை அடையாளமாக வைத்துத்தான் “சுத்தத் தமிழரை” இனம் காண முடியும். அதன் மூலம் இருமொழியாளர்களை அடையாளப்படுத்தி, இருமொழியாளர்கள் எதிர்ப்பை தீவிரமாக்கி, புதியதொரு எதிரியை கட்டமைத்து, எதிர்ப்பரசியல் மூலம் தாங்கள் வளர முடியும் என்று நாம் தமிழர் கட்சியினரும் சீமானும் கருதுவார்களெனில், முதலில் ஒன்றை செய்யட்டும். தமிழ்நாட்டில் உள்ள மக்களின் சாதிப்பட்டியலை எடுத்து, இந்த சாதியினர் ‘சுத்தத்தமிழர்’, இந்த சாதியினர் ‘தெலுங்கர்’, இந்த சாதியினர் ‘கன்னடர்’ என்ற பட்டியலை தங்களது கட்சி ஆவணத்தில் வெளியிடுங்களேன். (சாதிமறுப்பு திருமணம் செய்து அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை எதில் சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை. மேலும் அந்த பட்டியல் தமிழீழத்திற்கும் பொருந்துமா என்று அவர்கள் தான் விளக்க வேண்டும்)
மதம், புராணம், இதிகாசம், பண்பாடு என்பதன் பெயராலும், பழக்கவழக்கங்கள் என்பதன் பெயராலும் மக்களின் பொதுப்புத்தியில் உள்ள அடிமைத்தனத்தையும், காலத்துக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத பிற்போக்குத்தனங்களையும் எதிர்த்தே பெரியார் சண்டையிட்டார். அதாவது மக்களின் பொதுப்புத்தியை எதிர்த்து மக்களுக்காக மக்களிடமே சண்டையிட்டார். இதற்கு மக்களின் ஆதரவும், எதிர்ப்பும் எந்த அளவில் இருக்கும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.
ஆனால் மக்களின் பொதுப்புத்தியில் இருக்கும் அடிமைத்தனத்திற்கும், பிற்போக்குத்தனத்திற்கும், ஏதாவது ஒரு வியாக்கியானம் சொல்லி அதை நியாயப்படுத்த முயல்வது முற்போக்கும் ஆகாது; பண்பாட்டு மீட்பும் ஆகாது; தமிழனின் அறிவு வளர்ச்சிக்கு சிறிதும் பயன்படாது. எடுத்துக்காட்டாக முருகன் என்பது கடவுள் என்று மக்களின் மனதில் பதிந்திருக்கும் பொதுப்புத்தியாகும். அதை பாட்டன் என்று வியாக்கியானம் சொல்லி நியாயப்படுத்துவதும், பெண் அடிமைத்தனத்தின் குறியீடாக தாலி இருக்கும்போது, ‘அ’ வடிவ தாலியாக மாற்றி விளக்கம் கொடுப்பது என்பதெல்லாம் பண்பாட்டுப் புரட்சியாகாது. (வண்டியில் எலும்பிச்சை பழம் கட்டினால் ஓட்டுநருக்கு தூக்கம் வராது என்று நான்கு வேதியல் பெயர்களை கலந்து எழுதி அதில் அறிவியல்(?) இருப்பதாகவும், நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்று வியாக்கியானம் அளிப்பார்களோ அப்படி)
அடுத்து ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது திரு.சீமான் அவர்கள் “நா எங்கையாவது பெரியாரப் பத்தி தப்பா பேசி இருக்கேனா?” என்ற கேள்வியைக் கேட்டார். நான் அறிந்த வரையில் திரு.சீமான் பொதுமேடைகளில் பெரியாரை தவறாகப் பேசியது இல்லைதான். ஆனால் தன் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் மட்டும் “அண்ணாவின் பூமி, பெரியாரின் பூமி, எங்கருக்கு காமி! போய்வா சாமி(சிரிப்பொலி)” என்று அடுக்குமொழி நக்கல் வசனம் பேசுவார். அந்த நிலையில் தான் இப்போது இருக்கிறார். நாளை எப்படி இருப்பார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. மேலும் ஆண்டுதோறும் பெரியாருக்கு விழா எடுப்பார். சமூக வலைதளங்களில் பெரியாரைப் பற்றி கேவலமாக எழுதுபவர்களை கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று ‘பாக்கியராசன், மணிசெந்தில்’ ஆகியோரை வைத்து அறிக்கை வெளியிட செய்வார்.( அப்படிப் பார்த்தால் அவரது கட்சியினர் முக்கால் வாசிப்பேரை நீக்கி இருக்க வேண்டும்)
இது மிகப் பெரிய அரசியல் உத்தி என்று தான் சொல்லவேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சியும், கட்சியின் சார்பாக வெளிப்படுத்த முடியாத கருத்தை கட்சியில் உள்ள ஒருவரின் ‘தனிநபர்’ நிலைப்பாடாக சொல்வது நடைமுறையில் இருப்பதுதான். மத்திய பாஜக சொல்ல முடியாததை சுப்ரமணிய சாமியை வைத்து சொல்ல வைப்பது; தமிழக பாஜக சொல்ல முடியாததை எச்.இராசா மூலமாக சொல்வது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னணித் தலைவர்கள் சொல்ல முடியாததை சுமந்தரனை வைத்துச் சொல்வது, அதற்கு கடுமையான எதிர்ப்பும், விளக்கம் அளிக்க வேண்டிய சூழலும் ஏற்படும் போது ‘அது அவரின் தனிப்பட்ட கருத்து’ என்று தட்டிக் கழித்து நழுவது.
இந்த விடையத்தில் இன்னும் இரண்டு செய்திகளை சொல்லலாம். 1950-51 காலங்களில் பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருந்தபோது, பெரியார் அக்கொடுமைகளைக் கண்டித்து கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் பொதுவுடமை, சோசலிசம் என்று பேசிய ம.பொ.சி அப்போது திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். அந்த மாநாடுகளில் எல்லாம் ம.பொ.சி கண்ணியமான சொற்களில் பேசுவதும், அதே மேடையில் விபூதி வீரமுத்து,அணுகுண்டு அய்யாவு ஆகிய இருவரும் பெரியாரைப் பற்றி தரக்குறைவான மொழியில் பேசுவதும் நடந்துள்ளன. (ஆதாரம் – பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம் - சுப.வீ பக்கம் - 147, மற்றும் பெரியார் ஆகஸ்டு 15 -எஸ்.வீ.ஆர்)
இதே போலத்தான் திமுக ஆரம்பித்த பிறகு அண்ணா, பெரியாரைப் பற்றி கண்ணியமாக பேசுவதும், கருணாநிதி தரக்குறைவான சொற்களில் பேசுவதும் நடந்துள்ளது. இப்படி தனிப்பட்டவரின் கருத்து என்று வன்மைத்தைக் கொட்ட எல்லா கட்சியிலும் சிலரை வைத்துக் கொள்வார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியினரில் சீமான் பேச முடியாததைப் பேச பல சுப்பிரமணிய சாமிகள், சுமந்தரன்கள், வீரமுத்துக்கள்,அய்யாவுகள் இருக்கின்றனர். பெரியார் எதிர்ப்பு பேச தனி அமைப்பு ஒன்றே வீரத்தமிழர் முன்னணி என்று வைத்துள்ளனர்.
1938 செப்டம்பர் 11இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சென்னை கடற்கரைக் கூட்டத்தில் பெரியார் முழங்கிய “தமிழ்நாடு தமிழருக்கே” என்பதே முதல் தமிழ்த்தேசிய முழக்கமாகும். அவரை தமிழ்த்தேசியத்தின் முதன்மை எதிரியாக வீரத்தமிழர் முன்னணியினர் கட்டியமைக்க முற்படுவது சுத்த அயோக்கியத்தனமேயாகும். இந்த இடத்தில் கூட சில இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அதற்கும் மிகச்சுருக்கமாக விளக்கம் அளிக்கலாம்.
“வருணப் பாகுபாடு முதலில் தமிழர் சமுதாயத்திலிருந்துதான் பிறந்திருக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை. இந்த வருண வேறுபாடு தோன்றிய காலம் தமிழர் வட பாரதத்திலும் வாழ்ந்த காலமாக இருக்கலாம். ஆரியர் எனப்படுவோர் பல நூற்றாண்டுக் காலம் நாடோடிகளாக அலைந்து திரிந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர். நால்வருணப் பாகுபாடு என்பது விஞ்ஞான முறைப்படி மனித சமுதாயத்தின் வளர்ச்சியைக் குறிப்பதாகும்” (ஆதாரம் :தமிழகத்தில் பிறமொழியினர்- ம.பொ.சி - பக்கம்-246)
வீரத்தமிழர் முன்னணியினர் இப்போது சொல்வதை முன்பே சொன்ன ம.பொ.சி வருணப்பாகுபாடு தமிழர் சமுதாயத்திலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்று “சுத்தத் தமிழர்கள்(?)” பார்ப்பனர்களைக் காப்பாற்றுகிறார். அடுத்து இந்திய நிலப்பரப்பில் வாழக்கூடிய பெருவாரியான மக்களை இழிவான நிலையில் வைத்திருக்கும் வருணப் பாகுபாட்டை மனித சமுதாயத்தின் வளர்ச்சியைக் குறிப்பதாக சொல்கிறார். எந்த மனித சமூதாயம் என்று அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பார்ப்பான் தான் மனிதன். அவன் வளர்ச்சியே மனித சமுதாய வளர்ச்சி என்று எண்ணினாரோ என்னவோ?
இந்த சாதி என்பது தமிழரிடம் இருந்து தான் தோன்றியதா? அது தமிழனுக்கும் அடையாளம் தானா? என்ற கேள்விக்கு பெரியார் என்ன சொல்கிறார் என்று
கவனியுங்கள்.
“முதலாவதாக, இந்த சாதி என்னும் சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. சாதிக்கு ஆதாரம் இந்து மதம் என்று சொல்வது. அந்த இந்து மதம் என்ற சொல்லும் தமிழ்ச் சொல் அல்ல; அதற்கு ஆதாரமாக உள்ள வேதமும் மநுதர்மமும் நமக்குச் சம்பந்தப்பட்டவையல்ல. அவைகள் நம் மொழியில் உள்ளவையுமல்ல. நம் மக்களால் எழுதியவையுமல்ல; எப்படியோ அவை நம் தலைக்கு வினையாக வந்து சேர்ந்திருக்கின்றன; ‘இந்து’ என்ற சொல் எந்த மொழியிலும் இல்லை. ஆராய்ச்சிக்காரர்கள் அதை ஒரு நதியின் பெயர் என்கிறார்கள்; சிலர் ஓர் இடத்தில் வாழும் குறிப்பிட்ட மனிதர்களைக் குறிப்பது என்கிறார்கள்: சிலர் ‘பர்சிய’ மொழியில் திருடர்களைக் குறிப்பது என்கிறார்கள். அது மருவி வந்ததென்பார்கள் சிலர்.
மற்றபடி, வருணாசிரம தர்மம் என்னும் சொல்கூடத் தமிழ்ச் சொல் அல்ல. நம்நாட்டில் அந் நியமம் இருந்திருந்தால் நம் மொழியில் அதற்கு வார்த்தை இருந்திருக்கும். சோளம் நம் நாட்டில் விளைகிறது. அதைச் சோளம் என்று சொல்கிறோம். ஆங்கிலேயரும் அதைச் சோளம் என்றே சொல்லுவார்கள் ஏன்? அவர்கள் நாட்டில் அது இருந்ததில்லை. அது போலவே, காப்பியை நம் தமிழ்மக்கள் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு ஒரு பானமாக உபயோகிக்கவில்லை. அதனால், நம் தமிழ்மொழியில் அதற்கு ஒரு பெயரிடுவதற்கில்லாமல் போயிற்று. ஆதலால், நாமும் அதை அந்நிய நாட்டுப் பெயரால் ‘காப்பி’ என்றே அழைக்கின்றோம். ‘வருணாசிரம தர்ம சாதிப் பாகுபாடு’ நம் தமிழ்நாட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே இருந்திருந்தால், நம் மொழியில் அவைகளுக்குத் தனிப் பெயர் இருந்துதானிருக்கும். அன்றியும், இப்பெயர்களையும் இவ் வித்தியாசங்களையும் நாம் ஆதியிலிருந்தே கண்டித்து வந்திருக்கின்றோம் என்பதற்கு அறிகுறிதான் -ஆரியர்களை நாம் ‘மிலேச்சர்கள்” என்று சொல்லுவது. எனவே, இவை ஒழிய வேண்டுமானால், இவ் வாரியத்தன்மை ஒழிய வேண்டும். ஆரிய மதம் ஒழிய வேண்டும். ஆரியக் கொள்கை ஒழிய வேண்டும்.” (ஆதாரம்: சென்னை புரசைவாக்கத்தில் 19-10-1927 இல் பெரியார் சொற்பொழிவு, ‘குடியரசு’ 30-10-1927, பெரியார் சிந்தனைகள்-வே.ஆனைமுத்து, தொகுதி-2, இயக்கங்கள்-1, பக்கம்-708)
மேற்கண்ட பெரியாரின் உரையில் அவர் சொன்ன ‘நம்’ என்பது தமிழர்கள், ‘நம் மொழி’ என்பது தமிழ் மொழியை, ‘நம் நாடு’ என்பது தமிழ்நாட்டை என்பதை வீரத்தமிழர் முன்னணியினர் கவனிக்க வேண்டும்.
மேற் சொன்னதிலிருந்து வீரத்தமிழர் முன்னணியினர் மற்றும் ம.பொ.சி சொல்வது உண்மையா? அல்லது பெரியார் சொல்வது உண்மையா? என்பதை அறிவுள்ள தமிழ் மக்களே ஆய்ந்து பார்க்கட்டும்.
சாதியை ‘சாதி’ என்று மாற்றி விடுவதால் அது தமிழாகி விடாது. தமிழருக்கு உரித்தானதாகவும் ஆகிவிடாது.
தமிழர்களுக்குள் பிரிவினையை சாதியின் மூலம் கொண்டு வந்த ஆரியப் பார்ப்பனர்களை “அவாள் ஆத்துலேயும் தமிழ்தானே பேசுறாள்” என்று தமிழனாக்கி, சாதியை தமிழனுக்கு உரியதாக்கி, ‘தான் சாகும் காலம் வரையிலும் தமிழனின் இழிவுக்குக் காரணமான, தமிழ்த்தேசிய ஓர்மைக்கு முட்டுக்கட்டையாக நிற்கும் சாதியை ஒழிக்கப் போராடிய’ பெரியாரை தமிழினத்தின் மிகப் பெரிய எதிரியாக கட்டமைக்க முற்படுவதை சுத்த அயோக்கியத்தனமின்றி வேறென்ன சொல்வது? பார்ப்ப சேவகமின்றி வேறேன்ன சொல்வது?
சாதியை தமிழனின் அடையாளமாக கருதும் வீரத்தமிழர் முன்னணியினர், அந்த அடையாளத்தை ஒழிக்க காலம் முழுவதும் போராடிய பெரியாரை தமிழினத்தின் மிகப்பெரிய எதிரியாக பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் சாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரே இன்னும் இவர்கள் பார்வையில் ‘நாய்க்கர்’ ஆகத்தான் தெரிகிறார். பல சாதிமறுப்புத் திருமணங்களை செய்து வைத்த தோழர்.கோவை.இராமகிருஷ்ணன் “நாயுடு”வாகத் தெரிகிறார்.
சாதியை அடையாளமாக வைத்துத்தான் “சுத்தத் தமிழரை” இனம் காண முடியும். அதன் மூலம் இருமொழியாளர்களை அடையாளப்படுத்தி, இருமொழியாளர்கள் எதிர்ப்பை தீவிரமாக்கி, புதியதொரு எதிரியை கட்டமைத்து, எதிர்ப்பரசியல் மூலம் தாங்கள் வளர முடியும் என்று நாம் தமிழர் கட்சியினரும் சீமானும் கருதுவார்களெனில், முதலில் ஒன்றை செய்யட்டும். தமிழ்நாட்டில் உள்ள மக்களின் சாதிப்பட்டியலை எடுத்து, இந்த சாதியினர் ‘சுத்தத்தமிழர்’, இந்த சாதியினர் ‘தெலுங்கர்’, இந்த சாதியினர் ‘கன்னடர்’ என்ற பட்டியலை தங்களது கட்சி ஆவணத்தில் வெளியிடுங்களேன். (சாதிமறுப்பு திருமணம் செய்து அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை எதில் சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை. மேலும் அந்த பட்டியல் தமிழீழத்திற்கும் பொருந்துமா என்று அவர்கள் தான் விளக்க வேண்டும்)
மதம், புராணம், இதிகாசம், பண்பாடு என்பதன் பெயராலும், பழக்கவழக்கங்கள் என்பதன் பெயராலும் மக்களின் பொதுப்புத்தியில் உள்ள அடிமைத்தனத்தையும், காலத்துக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத பிற்போக்குத்தனங்களையும் எதிர்த்தே பெரியார் சண்டையிட்டார். அதாவது மக்களின் பொதுப்புத்தியை எதிர்த்து மக்களுக்காக மக்களிடமே சண்டையிட்டார். இதற்கு மக்களின் ஆதரவும், எதிர்ப்பும் எந்த அளவில் இருக்கும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.
ஆனால் மக்களின் பொதுப்புத்தியில் இருக்கும் அடிமைத்தனத்திற்கும், பிற்போக்குத்தனத்திற்கும், ஏதாவது ஒரு வியாக்கியானம் சொல்லி அதை நியாயப்படுத்த முயல்வது முற்போக்கும் ஆகாது; பண்பாட்டு மீட்பும் ஆகாது; தமிழனின் அறிவு வளர்ச்சிக்கு சிறிதும் பயன்படாது. எடுத்துக்காட்டாக முருகன் என்பது கடவுள் என்று மக்களின் மனதில் பதிந்திருக்கும் பொதுப்புத்தியாகும். அதை பாட்டன் என்று வியாக்கியானம் சொல்லி நியாயப்படுத்துவதும், பெண் அடிமைத்தனத்தின் குறியீடாக தாலி இருக்கும்போது, ‘அ’ வடிவ தாலியாக மாற்றி விளக்கம் கொடுப்பது என்பதெல்லாம் பண்பாட்டுப் புரட்சியாகாது. (வண்டியில் எலும்பிச்சை பழம் கட்டினால் ஓட்டுநருக்கு தூக்கம் வராது என்று நான்கு வேதியல் பெயர்களை கலந்து எழுதி அதில் அறிவியல்(?) இருப்பதாகவும், நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்று வியாக்கியானம் அளிப்பார்களோ அப்படி)
அடுத்து ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது திரு.சீமான் அவர்கள் “நா எங்கையாவது பெரியாரப் பத்தி தப்பா பேசி இருக்கேனா?” என்ற கேள்வியைக் கேட்டார். நான் அறிந்த வரையில் திரு.சீமான் பொதுமேடைகளில் பெரியாரை தவறாகப் பேசியது இல்லைதான். ஆனால் தன் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் மட்டும் “அண்ணாவின் பூமி, பெரியாரின் பூமி, எங்கருக்கு காமி! போய்வா சாமி(சிரிப்பொலி)” என்று அடுக்குமொழி நக்கல் வசனம் பேசுவார். அந்த நிலையில் தான் இப்போது இருக்கிறார். நாளை எப்படி இருப்பார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. மேலும் ஆண்டுதோறும் பெரியாருக்கு விழா எடுப்பார். சமூக வலைதளங்களில் பெரியாரைப் பற்றி கேவலமாக எழுதுபவர்களை கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று ‘பாக்கியராசன், மணிசெந்தில்’ ஆகியோரை வைத்து அறிக்கை வெளியிட செய்வார்.( அப்படிப் பார்த்தால் அவரது கட்சியினர் முக்கால் வாசிப்பேரை நீக்கி இருக்க வேண்டும்)
இது மிகப் பெரிய அரசியல் உத்தி என்று தான் சொல்லவேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சியும், கட்சியின் சார்பாக வெளிப்படுத்த முடியாத கருத்தை கட்சியில் உள்ள ஒருவரின் ‘தனிநபர்’ நிலைப்பாடாக சொல்வது நடைமுறையில் இருப்பதுதான். மத்திய பாஜக சொல்ல முடியாததை சுப்ரமணிய சாமியை வைத்து சொல்ல வைப்பது; தமிழக பாஜக சொல்ல முடியாததை எச்.இராசா மூலமாக சொல்வது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னணித் தலைவர்கள் சொல்ல முடியாததை சுமந்தரனை வைத்துச் சொல்வது, அதற்கு கடுமையான எதிர்ப்பும், விளக்கம் அளிக்க வேண்டிய சூழலும் ஏற்படும் போது ‘அது அவரின் தனிப்பட்ட கருத்து’ என்று தட்டிக் கழித்து நழுவது.
இந்த விடையத்தில் இன்னும் இரண்டு செய்திகளை சொல்லலாம். 1950-51 காலங்களில் பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருந்தபோது, பெரியார் அக்கொடுமைகளைக் கண்டித்து கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் பொதுவுடமை, சோசலிசம் என்று பேசிய ம.பொ.சி அப்போது திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். அந்த மாநாடுகளில் எல்லாம் ம.பொ.சி கண்ணியமான சொற்களில் பேசுவதும், அதே மேடையில் விபூதி வீரமுத்து,அணுகுண்டு அய்யாவு ஆகிய இருவரும் பெரியாரைப் பற்றி தரக்குறைவான மொழியில் பேசுவதும் நடந்துள்ளன. (ஆதாரம் – பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம் - சுப.வீ பக்கம் - 147, மற்றும் பெரியார் ஆகஸ்டு 15 -எஸ்.வீ.ஆர்)
இதே போலத்தான் திமுக ஆரம்பித்த பிறகு அண்ணா, பெரியாரைப் பற்றி கண்ணியமாக பேசுவதும், கருணாநிதி தரக்குறைவான சொற்களில் பேசுவதும் நடந்துள்ளது. இப்படி தனிப்பட்டவரின் கருத்து என்று வன்மைத்தைக் கொட்ட எல்லா கட்சியிலும் சிலரை வைத்துக் கொள்வார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியினரில் சீமான் பேச முடியாததைப் பேச பல சுப்பிரமணிய சாமிகள், சுமந்தரன்கள், வீரமுத்துக்கள்,அய்யாவுகள் இருக்கின்றனர். பெரியார் எதிர்ப்பு பேச தனி அமைப்பு ஒன்றே வீரத்தமிழர் முன்னணி என்று வைத்துள்ளனர்.
1938 செப்டம்பர் 11இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சென்னை கடற்கரைக் கூட்டத்தில் பெரியார் முழங்கிய “தமிழ்நாடு தமிழருக்கே” என்பதே முதல் தமிழ்த்தேசிய முழக்கமாகும். அவரை தமிழ்த்தேசியத்தின் முதன்மை எதிரியாக வீரத்தமிழர் முன்னணியினர் கட்டியமைக்க முற்படுவது சுத்த அயோக்கியத்தனமேயாகும். இந்த இடத்தில் கூட சில இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அதற்கும் மிகச்சுருக்கமாக விளக்கம் அளிக்கலாம்.
முதலாவது குற்றச்சாட்டு, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியவர்கள் தமிழறிஞர்கள் என்றும். அவர்களே “தமிழ்நாடு தமிழருக்கே” ஒன்று சொன்னார்கள் என்ற குற்றச்சாட்டு.(ஆதாரம் - தமிழ்நாடு தமிழருக்கே -க.சக்திவேல்)
இதற்கு ம.பொ.சி சொல்வதிலிருந்தே பதில் சொல்லலாம். “கட்டாய இந்தியை எதிர்த்து முதலில் மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கிளர்ச்சி தோன்றியது. எதிர்ப்பியக்கம் நடத்துவதில் வல்லவரான ஈ.வே.ராவின் தலைமை அதற்குத் தேவைப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார். தமிழ்ப் புலவர்கள் மட்டுமே நடத்திய தூயமொழிக் கிளர்ச்சியானது, பெரியார் தலைமை காரணமாக அரசியல் வண்ணம் பெற்றது. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்ற சொற்கள் முன்னணிக்கு வந்தன. “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற உரிமைக் குரலும் பிறந்தது. வில், புலி, மீன் சின்னங்கள் பொறித்த தமிழ்க்கொடி இந்தி எதிர்ப்பு வீரர்களின் கைகளில் காட்சியளித்தது. சுயமரியாதைக்காரர்களெல்லாம் ‘தமிழ் வாழ்க’ என்று வாய் மணக்க வாழ்த்தினர்.” (ஆதாரம்; தமிழகத்தில் பிறமொழியினர் - ம.பொ.சி –பக்கம் -189)
அடுத்த குற்றச்சாட்டு பெரியார் அப்போது தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினாலும், பின்பு “திராவிடர் நாடு திராவிடருக்கே” என்று சொன்னார் என்கிறார்கள். முதலில் பிறமொழியினரையும் உள்ளடைக்கிய சென்னை மாகாணத்தின் அந்த வரலாற்று காலச் சூழலை பார்க்க வேண்டும். 1956 நவம்பர் 1இல் மொழிவழி மாநிலங்கள் அமைந்ததை பெரியார் வரவேற்றதோடு,இதன்பின் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு “தனித் தமிழ்நாடு கொள்கை”யை வலியுறுத்துகிறார். 1973 டிசம்பர் 24இல் பெரியார் இறக்கும் கடைசி ஆண்டு வரை ”தனி நாடு” கோரிக்கையில் தான் (திராவிட நாடு இல்லை என்பதை கவனத்தில் கொள்க) உறுதியாக இருந்தார்.
1963 ஆண்டு சி.பி .இராமசாமி ஐயர் தலைமையிலான இந்திய ஒருமைப்பாட்டுக் குழுவின் பரிந்துரைப்படி நாடாளுமன்றத்தில் பிரிவினைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் “தனித்தமிழ்நாடு” கொள்கையில் தான் பெரியார் இருந்தார். பெரியாரிடம் இருந்து பிரிந்து 1949 செப்டம்பர் 17இல் “திராவி முன்னேற்றக் கழகம்” என்ற ஆரம்பித்த அண்ணாத்துரை அவர்களின் நிலைப்பாடு வேறு. (இது சம்பந்தமாக விரிவான விளக்கம் அறிய பார்க்க ; பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்-கொளத்தூர் மணி)
1963 ஆண்டு சி.பி .இராமசாமி ஐயர் தலைமையிலான இந்திய ஒருமைப்பாட்டுக் குழுவின் பரிந்துரைப்படி நாடாளுமன்றத்தில் பிரிவினைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் “தனித்தமிழ்நாடு” கொள்கையில் தான் பெரியார் இருந்தார். பெரியாரிடம் இருந்து பிரிந்து 1949 செப்டம்பர் 17இல் “திராவி முன்னேற்றக் கழகம்” என்ற ஆரம்பித்த அண்ணாத்துரை அவர்களின் நிலைப்பாடு வேறு. (இது சம்பந்தமாக விரிவான விளக்கம் அறிய பார்க்க ; பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்-கொளத்தூர் மணி)
இறுதியாக சில
* ‘திராவிடர்’ என்ற வார்த்தையை ஆராய்ச்சித்துறையில் இருந்து அரசியல் துறைக்கு முதன் முதலில் கொண்டு வந்த அயோத்தியதாச பண்டிதரை ஏற்றுக் கொள்கிறோம். திராவிடர் என்று பேசிய/எழுதிய பாரதிதாசனை தமிழ்த் தேசிய கவிஞராக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் திராவிடர் என்று பேசிய பெரியாரை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பது ஒருவரின் பிறப்பையும் சாதியையும் அடிப்படையாக வைத்து அவரது போராட்ட வாழ்வை நிராகரிக்கும் போக்கு அபத்தமானதும் கேவலமானதும் ஆகும்.
* தமிழ்த்தேசிய ஓர்மைக்குத் தடையாக இருக்கும் சாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரை தமிழ்த் தேசியத்தின் முதன்மை எதிரியாக கட்டமைப்பதை வீரத்தமிழர் முன்னணியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
* சீமானே சொன்னது போல மக்கள் தகவலை சரிபார்க்க மாட்டார்கள் என்று தொடர்ந்து பொய்களை சொல்லிவருவதை திரு.சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அந்த உத்தியின் அடிப்படையில் வரலாற்று புரட்டுக்களை கொண்ட “கண்டி நாயக்கர்- மறைக்கப்பட்ட தமிழீழ வரலாறு” என்ற ஆவணப்படத்தை எடுத்த வீரத்தமிழர் முன்னணியினரை கண்டிப்பதோடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
* “அப்படி என்ன சொல்லிட்டேன். தமிழேனு சொல்லிட்டேன்” என்று தொடர்ச்சியாக திரு.சீமான் கூறி வருகிறார். இங்கு தமிழன் என்று சொல்வதில் யாருக்கும் எந்த பிரச்சனையில் இல்லை. தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பதிலும், நீங்கள் முதலமைச்சர்(?) ஆவதிலும் (வாழ்த்துக்கள்) யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் யார் தமிழர்கள், எதை வைத்து தமிழரா என்று நிர்ணயிக்கிறீர்கள் என்பதில்தான் உங்களிடமான அடிப்படை முரண்பாடு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
* மேலும் சாதியை அடையாளமாக வைத்துப் பேசும் தமிழ்த் தேசியத்தை விடுத்து, சாதி ஒழிப்புடன் கூடிய தமிழ்த் தேசியம் பேச நாம் கட்சியினர் முன்வர வேண்டும்.
* ‘திராவிடர்’ என்ற வார்த்தையை ஆராய்ச்சித்துறையில் இருந்து அரசியல் துறைக்கு முதன் முதலில் கொண்டு வந்த அயோத்தியதாச பண்டிதரை ஏற்றுக் கொள்கிறோம். திராவிடர் என்று பேசிய/எழுதிய பாரதிதாசனை தமிழ்த் தேசிய கவிஞராக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் திராவிடர் என்று பேசிய பெரியாரை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பது ஒருவரின் பிறப்பையும் சாதியையும் அடிப்படையாக வைத்து அவரது போராட்ட வாழ்வை நிராகரிக்கும் போக்கு அபத்தமானதும் கேவலமானதும் ஆகும்.
* தமிழ்த்தேசிய ஓர்மைக்குத் தடையாக இருக்கும் சாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரை தமிழ்த் தேசியத்தின் முதன்மை எதிரியாக கட்டமைப்பதை வீரத்தமிழர் முன்னணியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
* சீமானே சொன்னது போல மக்கள் தகவலை சரிபார்க்க மாட்டார்கள் என்று தொடர்ந்து பொய்களை சொல்லிவருவதை திரு.சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அந்த உத்தியின் அடிப்படையில் வரலாற்று புரட்டுக்களை கொண்ட “கண்டி நாயக்கர்- மறைக்கப்பட்ட தமிழீழ வரலாறு” என்ற ஆவணப்படத்தை எடுத்த வீரத்தமிழர் முன்னணியினரை கண்டிப்பதோடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
* “அப்படி என்ன சொல்லிட்டேன். தமிழேனு சொல்லிட்டேன்” என்று தொடர்ச்சியாக திரு.சீமான் கூறி வருகிறார். இங்கு தமிழன் என்று சொல்வதில் யாருக்கும் எந்த பிரச்சனையில் இல்லை. தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பதிலும், நீங்கள் முதலமைச்சர்(?) ஆவதிலும் (வாழ்த்துக்கள்) யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் யார் தமிழர்கள், எதை வைத்து தமிழரா என்று நிர்ணயிக்கிறீர்கள் என்பதில்தான் உங்களிடமான அடிப்படை முரண்பாடு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
* மேலும் சாதியை அடையாளமாக வைத்துப் பேசும் தமிழ்த் தேசியத்தை விடுத்து, சாதி ஒழிப்புடன் கூடிய தமிழ்த் தேசியம் பேச நாம் கட்சியினர் முன்வர வேண்டும்.
சீமானின் அரசியல்: தமிழ் தேசியமா,பாசிசமா?
தமிழகத்தைத் தமிழனே ஆள வேண்டும் என்பதையே முதன்மை நோக்கமாகத் தனது கொள்கையில் நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி தமிழன் என்று யாரைச் சொல்கிறது? பிற மொழி பேசுபவருடன் எந்தவித (குருதிக்) கலப்புமில்லாத பூர்வீகத் தமிழர்கள் அதாவது மண்ணின் மைந்தர்களென அது சில சாதிகளைப் பட்டியலிடுகிறது. இது இனத் தூய்மைவாதம் என்றழைக்கப்படுகிறது.
சீமானுக்கு முன்னதாகவே இக்கோட்பாட்டுக்கான தந்தைமார்கள் உள்ளனர்
20 ஆண்டுகளுக்கு முன்னதாக பெங்களூர் குணா என்ற தமிழறிஞர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலை எழுதினார். அந்த நூலானது தமிழகத்தில் பூர்வீகமாக வசித்துவருபவர்கள், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆகியோரையே தமிழர்கள் என்று வரையறுத்தது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழகத்தில் குடியேறி வாழ்ந்து வருபவர்களை வந்தேறிகள் என்று அழைத்தது. இந்த வரிசையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வடுகர்களே திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணாதுரை, கலைஞர் ஆகியோர். இவர்களின் திராவிட இயக்கங்களே தமிழின உணர்வை மழுங்கடித்துத் தமிழின விடுதலையைப் பெறவிடாமல் திசைதிருப்பிவிட்டன. இவர்கள் வந்தேறிகள், தமிழின மீட்சிக்கு எதிரிகள் என்று குணா விமர்சித்திருப்பார். உண்மையான தமிழர்கள் என்று சில சாதிகளை மட்டும் பட்டியலிட்டிருப்பார். அவற்றைத் தவிர மற்ற சாதிகள், குறிப்பாக வணிக சாதிகள் தொடங்கிக் கடைநிலையிலுள்ள தெலுங்கு பேசும் அருந்ததியர்வரை வந்தேறிகள் என்று கூறியிருப்பார்.
குணாவின் அரசியல் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட இனத் தூய்மைவாதமாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழர்களின் முன்னேற்றத்திற்காகவும் தங்களது வாழ்வையே அர்ப்பணித்த பெரியார் உள்ளிட்ட அனைத்து திராவிடத் தலைவர்களையும் வந்தேறிகள் என்றும் எதிரிகள் என்றும் அவதூறு செய்வது வெறுப்பு அரசியலாகும். மொழி, மதம், இனம், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தி, ஒதுக்கி, செய்யப்படும் அரசியல்தான் பாசிச அரசியல். குணாவின் வாதத்தின் அடிப்படை அதுதான். பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழர்களோடு ஒன்று கலந்துவிட்டவர்களையும் தமிழர்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்களையும் தமிழர்கள் அல்லர் என்றும் தமிழ்ச்சாதிகள் அல்ல என்றும் முத்திரை குத்துவது இன வெறியை அடிப்படையாகக் கொண்ட பாசிசம்.
சீமானின் இனத் தூய்மைவாதமும் முரண்பாடுகளும்
குணாவின் இனத் தூய்மைவாத கோட்பாடு கடுமையான எதிர்ப்புக்குள்ளாகிப் படிப்படியாக முடங்கிப் போனது. முன்னதாக, மகாராஷ்டிரத்தில் பால் தாக்கரே பூர்வீக குடிமக்கள் கோட்பாட்டை முன்வைத்து மும்பைக்குப் பிழைப்புத் தேடிக் குடியேறியவர்களை வந்தேறிகள் என்று கூறினார். அவருடைய சிவசேனா அமைப்பினர் தமிழர்களை அடித்து விரட்டத் தொடங்கினர். தமிழர்கள் பதிலடி கொடுத்ததால் பிரச்சினை அடங்கியது. தற்போது சீமான் அதே இனத் தூய்மைவாதக் கோட்பாட்டைக் கையில் எடுத்துள்ளார். சில சாதிகளை மட்டும் தமிழ்ச் சாதிகள் என்று வரையறுத்துள்ளார். இதன்படி தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் பிற மொழி பேசுபவர்கள் வந்தேறிகள். உருது பேசும் முஸ்லிம்களும் இதில் உள்ளடங்குவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழக மேடைகளில் பேசும்போது இந்து கடவுள்களைக் கடுமையான முறையில் தாக்கிவந்தார். பார்வதி தான் குளிக்கும்போது காவலுக்கு வைத்த விநாயகரின் தலையை வெட்டி எறிந்த காமக் கொடூரன்தான் சிவன் என்று ஒருமுறை பேசினார். சில நாட்களிலேயே சிவபெருமான் எனது முப்பாட்டனார் என்றார். பழநிக்குச் சென்று பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு முருகனுக்குக் காவடி எடுத்தார். முருகன் எனது பாட்டனார் என்றார்.
இது குறித்துப் பத்திரிகையாளர் கேள்வி கேட்டதற்கு, தமிழ்க் கடவுள்களை உயிர்ப்பிப்பதன் மூலம் தமிழனின் தொன்மையை மீட்கப்போவதாகக் கூறினார். அவரின் கடவுள் மறுப்புக் கொள்கையைச் சுட்டிக்காட்டியபோது கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை என்பதெல்லாம் வேறு என்றும் இது வேறு என்றும் விளக்கமளித்தார். தமிழ்க் கடவுள்களை மீட்கும் நோக்கத்துடன் தமிழம் என்ற மதம் தொடங்கப்போவதாக அறிவித்தார். இந்துத்துவ அரசியலுக்கு ராமர் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு முருகன் என்றும் கூச்சமில்லாமல் அறிவித்தார். இது நாம் தமிழர் கட்சியின் தமிழின மீட்சித் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் அவர் கூறியிருந்தார்.
பொய்களும் சவடால்களும்
இனத் தூய்மைவாதமும் முரண்களும் ஒருபுறம் இருக்க, சீமான் அளவுக்குப் பொய் பேசும் நபரைப் பார்ப்பது கடினம். அவர் கூறிய பொய்கள் ஏராளம். ஓரிரு பொய்களை இங்கு பார்ப்போம்.
ஆமைக்கறி கதை அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அவர் (உலகிலேயே இல்லாத) ரஷ்யத் துப்பாக்கி ஏகே 74இல் (இவ்விடத்தில் வடிவேலுவின் காமெடியான பிகே 47 நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது) பயிற்சி எடுத்த கதை அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. கொளத்தூர் மணிதான் சீமானை இலங்கைக்கு அழைத்து சென்று பிரபாகரனிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். சில நிமிடங்களே நீடித்த அந்தச் சந்திப்பில் பிரபாகரனுடன் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. இத்தகவலை கொளத்தூர் மணி, வைகோ, சுபவீ ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், சீமான் மேடையில் பேசும்போது பிரபாகரன் தனக்கு ஆமைக்கறி விருந்தளித்து ஏகே 74 இயக்கப் பயிற்சி அளித்ததாகவும் பேசினார். இந்தப் பொய் சமூக ஊடகத்தில் அம்பலமானது. திராவிட இயக்கத் தலைவர்களும் அம்பலப்படுத்தினர்.
பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் ஒருமுறை சீமான் இப்படிப் பேசினார்: “நானோ, ஐயா ராமதாஸோ, அண்ணன் திருமாவளவனோ முதலமைச்சராக இருந்திருந்தால் இலங்கையில் யுத்தமே நடந்திருக்காது! மலையாளி மலையாள மண்ணையும், கன்னடன் கன்னட மண்ணையும், தெலுங்கன் தெலுங்கு மண்ணையும் ஆள்வதைப் போல, ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆண்டிருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் நடத்தும் துணிவே இந்திய அரசுக்கு வந்திருக்காது. அப்படி நடத்த முற்பட்டிருந்தால் இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருந்திருக்காது!” என்று கூறினார். ஒரு மாநில முதல்வர் என்றால் யார், அவருடைய அதிகார வரம்புகள் என்ன என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இப்படியெல்லாம் அவர் பேசுவதையும் அவரது தம்பிகள் கைதட்டி ரசிக்கின்றனர்.
இப்படிப்பட்ட சவடால்களில் ஒன்றை முதன்மைக் கொள்கையாக எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார். ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கும், எழுத்தறிவு இல்லாதவர்களுக்கும் அரசு வேலை அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
எழுவர் விடுதலை குறித்துப் பேசும்போது, தான் ஆட்சிக்கு வந்தால் ஒருநாள் அதிகாலை 3.30 மணிக்குச் சிறைச்சாலைக்குச் சென்று அவரே சிறைக்கதவைத் திறந்துவிடுவாராம். 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடுபவர்களையும் விடுவிப்பேன் என்றும் பேசியுள்ளார்.
சாதி ஒழிப்பு: நூதன மோசடி
சாதி ஒழிப்புக்கு அவர் வைக்கும் தீர்வும் ஒருவகை ஏமாற்று வேலைதான். ஒடுக்கும் சாதிகளையும் ஒடுக்கப்படுகின்ற சாதிகளையும் இணைப்பதற்கு மொழி உணர்வும் தமிழன் என்ற உணர்வும் போதுமானது என்கிறார். ஆனால், இதுவரை அவருடைய கட்சி உட்பட எந்தத் தமிழ் தேசிய இயக்கங்கள், கட்சிகள் மத்தியில் அப்படி ஓர் இணைப்பு வரவில்லை.
பொன்பரப்பி தலித் மக்கள் தாக்கப்பட்டபோது அந்தத் தாக்குதலை நடத்தியவர்களை நேரடியாகக் கண்டிக்காமல் சாதிய சக்திகள் என்று பொத்தாம்பொதுவாக அறிக்கை வெளியிட்டார்.
இன்னொரு பக்கம் தேவர் குரு பூஜையின்போது பசும்பொன்னுக்குச் சென்று தேவரைப் புகழ்ந்து பேசுவார். இமானுவேலின் குருபூஜையின்போது இமானுவேலையும் புகழ்ந்து பேசுவார். தமிழின ஒற்றுமை பேசும் சீமான், தேவர் நினைவிடத்தில் இமானுவேலை ஏன் பேசுவதில்லை என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
சாதிய உணர்வை விட்டொழிக்காமல் தமிழ் தேசிய உணர்வு என்பது கானல் நீரே என்றும் எந்த தலித் அல்லாத தமிழர் வீட்டில் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பிய இயக்குநர் பா.இரஞ்சித்தை ஒருமையில் அழைத்துச் சாடினார் சீமான். திராவிட இயக்கத் தலைவர்கள் ஸ்டாலின் உட்பட பலரையும் ஒருமையில் அழைப்பது, அநாகரீகமான முறையில் திட்டுவது எனச் சீரழிந்த பண்பாட்டையும் பரப்பிவருகிறார்.
தமிழகத்தில் பலவிதமான அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. அது ஜனநாயகத்தின் அடையாளம். ஆனால், இனத் தூய்மைவாதம் பேசி, சர்வாதிகாரப் போக்கோடு கட்சியை நடத்திவரும் சீமான் போன்றவர்கள் ஜனநாயக உணர்வுக்கு எதிரான போக்கை முன்னெடுக்கிறார்கள். நமது ஜனநாயக அமைப்பு தரும் வாய்ப்பையும் பாதுகாப்பையும் பயன்படுத்திக்கொண்டு அவர் இதைச் செய்வதுதான் பெரிய நகைமுரண்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தாவிட்டால் உயிருக்கே ஆபத்து. ஜனநாயகம் என்னும் அமைப்பைப் பீடிக்கும் புற்றுநோய்தான் இனத் தூய்மைவாத அரசியல் என்பதைத் தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்.
சீமானின் பொய்கள், அயோக்கியத்தனங்கள் ஒரு பார்வை.
1) தலைவன் பெரியார் - தலைவனாக ஏற்க முடியாது
2) மிகவும் கெட்ட வார்த்தைகளால் சிவன், முருகன், கண்ணனை திட்டியது - பின்னர் முப்பாட்டன் என்று பல்டி அடித்தது
3) விஜயலட்சுமி
4) பாண்டிச்சேரி டாக்டர்
5) கனடா பெண்
6 ) ஜெயலலிதா காலை நக்கியது
7) பஸ்ஸை எரித்தது பற்றி முரண்பட்ட கருத்துக்கள்
8) 28 கிலோ ஆமைக்றி
9) வான்கோழி பிரியாணியில் யானை கால் அளவுள்ள கால்
10) பிரபாகரன் இருந்து இடத்தில் நான் இருந்திருந்தால்
11) அரிசி அளவுள்ள குண்டுடன் A74 துப்பாக்கி பயிற்சி
12) 40 டன் அரிசி கப்பலில் துப்பாக்கி பயிற்சி
13) 14 வழி சாலை (நடக்க, பைக், கார், ஆம்புலன்ஸ், காவல் வாகனம், பஸ், லாரி) அமைப்பதாக வரைவு திட்டம் ஆனால் தற்போது 7 வழி சாலைக்கு எதிராக போராட்டம்
14) சேலம் விமானநிலையம் விரிவாக்கம் பற்றி சீமானின் முரண்பட்ட கருத்துக்கள் - விரிவாக்கம் செய்து சுற்றுலாவை மேம்படுத்த படும் என வரைவு திட்டத்தில் குறிப்பு ஆனால் அதற்கு எதிராக இப்போது?
15) பிரபாகரன் பெயரை சொல்லி வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களிடம் பணம் வசூல் செய்து சாதனை
16) ஈழம் அமையாமல் திருமணம் இல்லை என்று சொன்னான்
17) ஈழத்து பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று சொன்னான்
18) அருணனிடம் விட்ட சவாலில் கேவலமாக தோற்ற பிறகும் இன்னும் கட்சியை களைத்து விட்டு CPM ல் சேராதது ஏன்?
19) IPL போட்டியின் போது காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடியவனை முதலில் எங்க தம்பி என்று சொல்லி விட்டு பின்பு அந்த தொம்பி எங்க கட்சியே கிடையாது என்று ஏன் சொன்னான்?
20) வைகோ அவர்கள் பிரபாகரன் பெயரை சொல்லி வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களிடம் பிச்சை எடுக்கிறான் என முன் வைத்த குற்றச்சாட்டுக்கு இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை?
21) தன்னுடைய பெயர், பூர்வீகம், தகப்பன் பெயர் பற்றி கேட்டால் ஏன் மழுப்பலான பதில்? உண்மை கூற வேண்டியது தானே?
22) பிரபாகரன் படத்தின் முன்னாள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவன் பெண்ணுடன் கேவலமாக நடந்தான். அவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
23) யார் தமிழன் தீர்மானிக்கும் உரிமை யார் உனக்கு கொடுத்து? 2006-2009 களில் காசுக்காக மாரடித்த கதை உலக அறியும்
24) ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டரில் மாடு மேய்க்கிறான் என்று சொல்லி தமிழ் நாட்டிலும் இப்படி செய்யலாம் என்கிறாய்? எனக்கு வாயை தவிர மற்ற இடத்திலும் சிரிப்பு வருது.
(ஆஸ்திரேலியாவில் ஒரு சாதாரண விவசாயி 100 ஏக்கர் நிலம் வைத்திருப்பார். ஆனால் இங்கு சாதாரண விவசாயி 2-4 ஏக்கர் நிலம் தான் வைத்து இருப்பார்கள். இதில் எப்படி ஹெலிகாப்டரில் மாடு மேய்ப்பது? முதலில் இந்தியாவில் Person/SqFeet எவ்வளவு உள்ளது, ஆஸ்திரேலியாவில் எவ்வளவு உள்ளது என்று தெரிந்துகொண்டு பிறகு அதற்கு சாத்தியமானவற்றை பேசு. வாயில வந்தத உளறிக்கொண்டு திரியாதே.)
26) பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறி விட்டு பின்பு வேறு ஒருவர் கூறி பிரச்சினை வந்தவுடன் அதற்கு மீண்டும் ஆதரவு அளித்தது.
1) தலைவன் பெரியார் - தலைவனாக ஏற்க முடியாது
2) மிகவும் கெட்ட வார்த்தைகளால் சிவன், முருகன், கண்ணனை திட்டியது - பின்னர் முப்பாட்டன் என்று பல்டி அடித்தது
3) விஜயலட்சுமி
4) பாண்டிச்சேரி டாக்டர்
5) கனடா பெண்
6 ) ஜெயலலிதா காலை நக்கியது
7) பஸ்ஸை எரித்தது பற்றி முரண்பட்ட கருத்துக்கள்
8) 28 கிலோ ஆமைக்றி
9) வான்கோழி பிரியாணியில் யானை கால் அளவுள்ள கால்
10) பிரபாகரன் இருந்து இடத்தில் நான் இருந்திருந்தால்
11) அரிசி அளவுள்ள குண்டுடன் A74 துப்பாக்கி பயிற்சி
12) 40 டன் அரிசி கப்பலில் துப்பாக்கி பயிற்சி
13) 14 வழி சாலை (நடக்க, பைக், கார், ஆம்புலன்ஸ், காவல் வாகனம், பஸ், லாரி) அமைப்பதாக வரைவு திட்டம் ஆனால் தற்போது 7 வழி சாலைக்கு எதிராக போராட்டம்
14) சேலம் விமானநிலையம் விரிவாக்கம் பற்றி சீமானின் முரண்பட்ட கருத்துக்கள் - விரிவாக்கம் செய்து சுற்றுலாவை மேம்படுத்த படும் என வரைவு திட்டத்தில் குறிப்பு ஆனால் அதற்கு எதிராக இப்போது?
15) பிரபாகரன் பெயரை சொல்லி வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களிடம் பணம் வசூல் செய்து சாதனை
16) ஈழம் அமையாமல் திருமணம் இல்லை என்று சொன்னான்
17) ஈழத்து பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று சொன்னான்
18) அருணனிடம் விட்ட சவாலில் கேவலமாக தோற்ற பிறகும் இன்னும் கட்சியை களைத்து விட்டு CPM ல் சேராதது ஏன்?
19) IPL போட்டியின் போது காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடியவனை முதலில் எங்க தம்பி என்று சொல்லி விட்டு பின்பு அந்த தொம்பி எங்க கட்சியே கிடையாது என்று ஏன் சொன்னான்?
20) வைகோ அவர்கள் பிரபாகரன் பெயரை சொல்லி வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களிடம் பிச்சை எடுக்கிறான் என முன் வைத்த குற்றச்சாட்டுக்கு இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை?
21) தன்னுடைய பெயர், பூர்வீகம், தகப்பன் பெயர் பற்றி கேட்டால் ஏன் மழுப்பலான பதில்? உண்மை கூற வேண்டியது தானே?
22) பிரபாகரன் படத்தின் முன்னாள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவன் பெண்ணுடன் கேவலமாக நடந்தான். அவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
23) யார் தமிழன் தீர்மானிக்கும் உரிமை யார் உனக்கு கொடுத்து? 2006-2009 களில் காசுக்காக மாரடித்த கதை உலக அறியும்
24) ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டரில் மாடு மேய்க்கிறான் என்று சொல்லி தமிழ் நாட்டிலும் இப்படி செய்யலாம் என்கிறாய்? எனக்கு வாயை தவிர மற்ற இடத்திலும் சிரிப்பு வருது.
(ஆஸ்திரேலியாவில் ஒரு சாதாரண விவசாயி 100 ஏக்கர் நிலம் வைத்திருப்பார். ஆனால் இங்கு சாதாரண விவசாயி 2-4 ஏக்கர் நிலம் தான் வைத்து இருப்பார்கள். இதில் எப்படி ஹெலிகாப்டரில் மாடு மேய்ப்பது? முதலில் இந்தியாவில் Person/SqFeet எவ்வளவு உள்ளது, ஆஸ்திரேலியாவில் எவ்வளவு உள்ளது என்று தெரிந்துகொண்டு பிறகு அதற்கு சாத்தியமானவற்றை பேசு. வாயில வந்தத உளறிக்கொண்டு திரியாதே.)
26) பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறி விட்டு பின்பு வேறு ஒருவர் கூறி பிரச்சினை வந்தவுடன் அதற்கு மீண்டும் ஆதரவு அளித்தது.
சீமானை பற்றி அவருடைய முன்னாள் ஆதரவாளர் கொடுத்த அறிக்கை
நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன. எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன். இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும்.
சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:
ஈழப்படுகொலைக்கு பின்னர் ஐநாவின் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது. அதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில் LTTE யினர் போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார் சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில், "விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு
கொன்றனர்" என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான். நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று ஐ.நா விசாரணை குழுவில் வாக்குமூலம்அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான்.
சீமானின் இந்த துரோகத்தை கண்டித்துதான் சீமான் கலந்துகொண்ட"முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், த.வெள்ளையன், இயக்குனர் வ.கெளதமன் ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் தீவிரமான தமிழ் உணவாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
சீமானின் துரோகத்துக்கு இரண்டு ஆதாரங்கள்:
1. விகடன் என்பது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிக்கை. ஈழ இறுதிபோர் உச்சத்தில் இருந்த போது விகடன் தான் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் உண்மை செய்திகளை தைரியமாக வெளியிட்டது அனைவரும் அறிந்தது.
இப்போது கூட சீமானின் பேட்டிகளை அதிகமாக வெளியிட கூடிய வெகுஜென பத்திரிக்கை விகடன் தான். அப்படிப்பட்ட பத்திரிக்கையிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக ஐநாவில் சீமான் சமர்பித்த அறிக்கை பற்றி மிக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது பொய் என்றால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார். ஏனெனில் விகடன் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகும் வார இதழ். ஆனால் சீமான் இதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுவே அவரின் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறது. விகடன் வெளியிட்ட செய்திக்கான லிங்கை கீழே கொடுத்து உள்ளேன்
http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art
2.தேவர் சமூகத்து மக்களால் நடதப்படும் பேஸ்புக் பக்கத்திலும் சீமான் ஐநாவில் சமர்பித்த அறிக்கைக்கு எதிராக சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவர் சாதி மக்கள் என்ன வேற்று மொழிகாரர்களா? அவர்கள் சீமான் மேல் ஏன் அவதூறு பரப்ப வேண்டும்? அதற்கான இணைப்பு கீழே
https://m.facebook.com/thevarvamsamfilmsindia/posts/1614333865554009:0
சீமான் இப்படி பொய் சொல்ல காரணம் தாம் தான் விடுதலை புலிகளின் பிரதிநிதி என்று கூறி வெளிநாடுவாழ் தமிழர்களிடம் பணம் பறிக்க தான். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி
https://i0.wp.com/www.pathivu.com/app/uploads/2016/08/se.jpg
சீமானின் இலங்கை பயண பொய்கள்:
சீமான் இலங்கைக்கு சென்றது திரைப்படம் எடுப்பது தொடர்பான பயிற்சி கொடுக்க தான். இதை நடிகர் ராஜ்கிரன் ஒரு பேட்டியில் பேச்சுவாக்கில் கூறிவிட்டார். சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது 5 நிமிடங்களுக்குள் தான். பாரதிராசா, மகேந்திரன் போன்றோர் எற்கனவே இதேபோல் சென்று தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேமாதிரி தான் ஒரு இயக்குனர் என்ற அடிப்படையில் சீமானோடு ஒரே ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் தலைவர்.அதன் பிறகு பிரபாகரன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சீமான் என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை. ஆனால் சீமானோ அவரோடு எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, என்னமோ இவர் தான் பிரபாகரனின் வலது கையாக செயல்பட்டது போலவும், பிரபாகரன் என்னிடம் "அதை கூறினார், இதை கூறினார்" என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார். அதுகூட பரவாயில்லை, "பிரபாகரன் எனக்கு இலையில் கடல் நண்டு பரிமாறினார்" என்று எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி உண்மையிலேயே பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால், "இவர் இப்போது சொல்லும் விசயங்களில் ஒன்றை கூட ஏன் தலைவர் உயிரோடு இருக்கும் போது மேடைகளில் கூறவில்லை?" ஏனெனில் உண்மையை பிரபாகரன் வெளியிட்டு விடுவார் என்ற பயம் தான் காரணம்
ராஜ்கிரனுக்கு சீமானுடன் எந்தவித கசப்பும் கிடையாது. அவர் திரைதுரையில் ஒழுக்கமானவர் என்று பெயர் எடுத்தவர். தமிழ் சினிமாவில் உள்ள ஒருவர் கூட ராஜ்கிரனை பற்றி சிறிய குறைகூட சொல்ல மாட்டர்கள். ராஜ்கிரன் எந்த கட்சியிலும் உறுப்பினரும் கிடையாது. நந்தா படத்தில் பிரச்சனை வரும் என்று சிவாஜிகணேசன் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் இலங்கை தமிழர்கள் மீது உள்ள பாசத்தால் தைரியமாக நடித்தவர் ராஜ்கிரண். எனவே அவர் பொய்யோ, அவதூறோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமானின் இலங்கை பயணம் பற்றி கொடுத்த பேட்டி கீழே உள்ளது
https://www.youtube.com/watch?v=YKAp_QIDK2o
இதுமட்டும் அல்லாது புலிகளின் தளபதி மரியாதைகுறிய அண்ணன் சூசை அவர்கள் சீமானை பற்றி பேசுவது போல போலியான ஆடியோவை யுடிப்பில் வெளியிட்டு உள்ளார் சீமான் . அப்படி அவர் உண்மையாக சீமானை பற்றி பேசி இருந்தால், அதை புலிகள் அவர்களின் அதிகாரபுர்வ வானொலியிலேயே வெளியிடுவார்கள்.இதுதான் விடுதலை புலிகளின் மரபு. அனைவரும் இறந்தபின், தான் சொல்லும் பொய்யை மறுக்க யாரும் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது நியாயமா சீமானே? அரசியல் விமர்சகர்கள் உங்களை "பிணம்திண்ணி" என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது சீமான்
சீமானும் சிங்களர்களும்:
சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் காரணமாக தான் தனது தம்பி படத்தில் ஒரு சிங்கள பெண்ணை(பூஜா) ஹீரோயினாக நடிக்க செய்தார் சீமான். ராஜபக்சேவின் சொந்தங்கள் தயாரித்த கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்த போது "கத்தி படத்தை எதிர்க்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியவர் சீமான். கடைசியாக ஐ.நாவின் டப்லின் தீர்ப்பாயத்தில் "விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொன்றனர்" என்று ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார் சீமான். ஈழ போர் தோல்வியில் முடிந்ததும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முயன்றார்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள். ஒரு காலத்தில் நாடு இல்லாத யூதர்கள் இது போன்ற அரசை அமைத்து பிறகு இஸ்ரேல் என்ற நாட்டை பெற்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கள அரசு தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க முடிவு செய்தது. சீமானுக்கு எங்கிருந்தோ பணம் வந்து குவிந்தது.அதனால் தான் பல வருடம் அரசியலில் இருந்த பாமாகவுக்கு இணையாக புதிதாக கட்சி தொடங்கிய சீமானும் சென்ற தேர்தலில் டிவிகளில் "போட்டு பார் ஓட்டை, அப்புறம் பார் நாட்டை" என்று பிரமாண்டமாக விளம்பரம் செய்தார்.உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த தமிழ் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்புகள் அங்கு தொடங்கப்பட்டன. அதன் பிறகு இன்று வரை உண்மையான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை
சீமானும் தமிழ்நாடும்:
சரி இப்போது தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். சீமான் தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கொந்தளிக்கிறார். ஆனால் அதை செய்யக்கூடிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனும், கிராணைட் கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்? சீமானுக்கு திருமணம் முடிந்த உடன் வைகுண்டராஜன் தான் தடபுடலாக கறி விருந்து கொடுத்தார். பதிலுக்கு வைகுண்டராஜன் மகன் திருமணத்தை சீமான் தான் முன்னின்று நடத்தி வைத்தார். நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய "நாம் தமிழர்" கட்சிக்கு வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் அளவுக்கு அதிகமாக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.சீமானட வைகுண்டராஜனின் பினாமி என்று கூறப்படும் குற்றச்சாட்டை இது உறுதிபடுத்துவது போல் உள்ளது.பி.ஆர்.பியில் தொழிலாளர் பிரச்சனை வந்த போது பி.ஆர்.பிக்கு ஆதரவாக "பி.ஆர்.பியிடம் வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?" என்று பேசியதும் சீமான் தான். இவர்தான் ஆட்சிக்கு வந்து இயற்கை வளங்களை காக்க வைகுண்டராஜனையும், பி.ஆர்,பியையும் கைது செய்ய போவதாக கூறுகிறார். அடுத்து கல்வியை அரசுடைமை ஆக்கப்போவதாக சீமான் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்து தான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்? இன்று அதிமுகவுக்கு எதிராக பொங்கும் சீமான் "சசிகலாவின் கணவர் நடராஜனின் காலில் விழுந்தவர்" என்பது தான் உண்மை வைகுண்டராஜன் சீமானுக்கு விருந்து வைத்ததை கம்யுனிஸ்டுகளின் இணையதளமாகிய வினவில் கடுமையாக விமர்சித்தார்கள். அதற்கான இணைப்பு கீழே
http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/
சரி எந்த பதவியிலுமே இல்லாத சீமானுக்கு தொழில் அதிபர்கள் ஏன் பணம் தருகிறார்கள்? தொழில் அதிபர்கள் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பணம் கொ டுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கு பினாமியாக இருந்தால் பணத்தை வாரி வழங்குவார்கள். சுப்பிரமணியசாமி, உத்தரபிரதேசத்தின் அமர்சிங்
மாதிரி. மேலும் சீமானின் வெளிநாட்டு தொடர்புகள் கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற அவர்களுக்கு மிகவும் உதவும். தாது மணல் திருடன் வைகுண்டராஜன ஏன் சீமானுக்கு கறி விருந்து கொடுக்க வேண்டும். அவரின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒரு வார்டு மெம்பராக கூட இல்லாத உங்க கட்சிக்கு ஏன் அளவுக்கு அதிகமான முக்கியதுவம் தரப்படுகிறது. கிரானைட் கொள்ளையன் பிஆர்பி ஆலையில் தொழிலாளர் போராட்டம் நடத்தினால் சீமானுக்கு ஏன் அவர்களை திட்டுகிறார்? இந்த கேள்விகளுக்கு பதில் தேடினாலே சீமானுக்கும் கொள்ளையர்களுக்கும் உள்ள தொடர்பு புரிந்துவிடும்
சீமானும் விவசாயமும்:
விவசாயத்தை காப்பாற்ற போவதாக சீமான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு முழங்குகிறார்.
ஆனால் விவசாய நிலங்களை பிளாட்களாக மாற்ற நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக 19.10.2016 அன்று சென்னை எலும்பூரில் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார் சீமான். இந்த போராட்டத்தை தலைமேயேற்று நடத்தியர் "இந்தியதேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ்" சங்க தலைவரான விருகை வி.என்.கண்ணன். சீமான் ஏன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றால்,"ரியல் எஸ்டேட் தரகர்கள் தான் கட்சிக்கு நிதி கொடுப்பார்கள், விவசாயிகள் பெரிதாக நிதி கொடுக்க மாட்டார்கள்". இப்போது இயற்கை விவசாயம் பற்றி பேசும் சீமான் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உர கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு அவர்களுக்கு சாதகமாக நடக்க மாட்டாரா? ஏனெனில் அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக உர கம்பெனிகள் பணம் தருவார்கள். சீமான் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போரட்டம் நடத்தியதற்கான ஆதாரம்(இது சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது)
https://m.facebook.com/ArasiyalNaiyaandi/photos/a.618198474956133.1073741828.592382070871107/1019537271488916/?type=3&comment_id=1019598791482764&_rdr#1019598791482764
சீமானும் ஜல்லிகட்டும்:
கட்சி சார்பில்லாமல் மாணவர்கள் மதுரையில் ஜல்லிகட்டுக்காக நடத்திய பிரமாண்ட போராட்டத்தில் சீமானின் ஆதரவாளர்கள் சீமானின் படத்தை வைக்க முயன்றுள்ளனர். ஆனால் மாணவர்கள் இதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் இதை அனுமதித்திருந்தால் என்னமோ அந்த பிரமாண்ட போராட்டமே சீமானால் தான் நடத்தப்பட்டது போன்ற பொய்யான தோற்றத்தை சீமானின் ஆதரவாளர்கள் உருவாக்கியிருப்பார்கள். இதனால் சீமான் போராட்ட களத்திற்குள் வந்த போது அவருக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தண்ணீர் பாட்டிலை சீமான் மீது வீசி அவரை விரட்டி அடித்தனர். இதனால் கோபம் அடைந்த சீமான் எப்படியாவது இந்த போராட்டத்தை பிசுபிசுக்க செய்ய வேண்டும் என்ற வெறியில் மதுரையில் தனியாக பாேட்டி போராட்டம் நடத்தினார். தமிழர்கள் அனைவரும் கட்சி சார்பின்றி சாதி, மத பேதங்களை கடந்து ஒரு நல்ல நோக்கத்திற்காக போராடுவதே அபூர்வம். அதிலும் அரசியல் லாபம் அடைய பார்ப்பது நியாயமா சீமான்? இதுபற்றி வந்துள்ள பத்திரிக்கை செய்தி
www.dailythanthi.com/News/Districts/2017/01/19044613/The-students-refused-to-allowIn-Madurai--Seeman-who.vpf
சீமான் ஒரு தமிழனா?:
சேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) என்ற நாடகத்தில் செபஸ்டியன் என்ற ஒரு பாத்திரம் வரும். செபஸ்டியன், வயோலா என்ற இருவரும்ர இட்டையர்கள் என்று சேக்ஸ்பியர் சித்தரித்து இருப்பார். செபஸ்டியன் என்ற பெயர் லத்தீன் மொழிப்பெயர் ஆகும். மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் புலங்கும் பெயர் செபஸ்டியன் ஆகும். சேஷாத்ரி, தோத்தாத்ரி என்ற பெயர்களைக் கேட்டவுடனே பிராமணர்கள் என்று நாம் அடையாளம் காண முடிவது போல, செபஸ்டியன் என்ற பெயரைக் கேட்டவுடன், இது மலையாள கிருத்துவக் குடும்ப பெயர் என்று விவரம் அறிந்தவர்களால் எளிதில் உணர முடியும். இதுதான் சீமானின் அப்பாவின் பெயர். தன்னை யாரும் செபாஸ்டின் சீமான் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக தான் 2014ல் அரசாங்க பதிவேட்டில் தனது பெயரை செந்தமிழன் சீமான் என்று மாற்றி விட்டார்.
சீமான் அவர்கள் ஒரு மலையாள கிறிஸ்துவரே. தமிழ் சமூகத்தை சார்ந்தவர் என்ற சாதி சான்றிதழை அவர் வாங்கி வைத்திருக்க கூடும். அதை மறுப்பதற்கில்லை. காசு வாங்கி கொண்டு குடியரசு தலைவருக்கே கைது வாரண்ட் கொடுக்கும் ஒரு நாட்டில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஒருவேளை சீமான் உண்மையிலேயே தமிழன் என்றால் "இந்த குற்றச்சாட்டு எழுந்த உடனேயே பொங்கி இருப்பார். இல்லையெனில் தகுந்த ஆதரத்தோடு அதை மறுத்து இருப்பார்". ஏனெனில் இது அவரின் மண்ணின் மைந்தர் கொள்கையையே கேள்விகுறி ஆக்ககூடிய மிகக் கடுமையான குற்றாச்சாட்டு. எங்கே சீமானின் பத்தாம் வகுப்பு மார்க் சீட்டை வெளியிட சொல்லுங்கள் பார்ப்போம்/ நிச்சயமாக வெளியிட மாட்டார். ஏனென்றால் அதில் அவருடைய அப்பாவின் உண்மையான பெயர் தான் இருக்கும். இந்த விசயத்தில் சீமானின் கள்ள மௌனம் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது
சீமானின் கொள்கைகள்:
*சீமானின் தேர்தல் அறிக்கையில் இருப்பவை அனைத்தும் ஏற்கனவேமுகநூல் பகிர்வுகளாக வந்தவைதான். இதுவரை வந்த முகநூல் போஸ்ட்கள், வாட்ஸ்ஆப் பார்வேர்டு செய்திகள் எல்லாம் ஒன்று விடாமல் படிப்பவர் என்றால் இந்த அறிக்கையைப் படிக்க வேண்டியதில்லை. *விவசாயத்தை அரசு வேலை ஆக்குவேன். ஆடு, மாடு மேய்தலும் அரசு வேலையாக ஆக்கப்படும்" என்கிறார். இது எல்லாம் ஏற்கனவே கம்யூனிஸ ரஷ்யாவில் முயற்சி செய்து அந்த நாடே திவால் ஆகி ரஷ்யாவே உடைந்து சிதறிவிட்டது. இது நடைமுறை சாத்தியமற்றதது. அதனால் தான் பாமக சாதி கட்சி என்றகெட்ட பெயர் இருந்தாலும் அதன் தேர்தல் அறிக்கையை பத்ரி சேஸாத்ரி போன்ற பொருளாதார அறிஞர்கள் பாராட்டினர். திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள் கூட பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தனர். ஏனெனில் பாமகவின் தேர்தல் அறிக்கை நடைமுறை சாத்தியமுடையது
சீமானின் இன்னொரு வாக்குறுதி என்னவென்றால் ”தமிழ்நாட்டுக்கு தனியாக ராணுவத்தை கட்டமைப்பேன்” என்று கூறுகிறார். இந்தியாவில் இது சாத்தியம் இல்லையென்று கலவி அறிவு இல்லாதவர்கள் கூட கூறிவிடுவார்கள். இவரின் அனைத்து தேர்தல் வாக்குறிதிகளும் கிட்டதட்ட இதே மாதிரி தான்.
சீமானின் ஆதரவாளர்கள்:
சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய தமிழ் மீது பற்று உடைய ஈழப் போரால் விரக்தி அடைந்த, திராவிட கட்சிகளின் ஊழலால்வெறுப்படைந்த அப்பாவி இளைஞர்கள் தான். அவர்களிடம் பொறுமையாக சீமானை பற்றிய உண்மைகளை விளக்கி கூறினால் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு சுதாரித்து அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "சரி தமிழர்களுக்காக போரடக்கூடிய வேறு நல்ல தலைவர்கள் யார்?" என்று கேட்கிறார்கள். அதாவது வேறு வழியில்லாமல் தான் அவர்கள் இவரை ஆதரிக்கிறார்கள். அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் "வேறு நல்ல தலைவர்கள் இல்லை என்பதற்காக, வெறும் பேச்சை மட்டும் பார்த்து . ஊழல்வாதிகளுக்கு பதிலாக துரோகிகளை தேர்ந்தெடுக்க கூடாது" கருணாநிதி ஆவேசமாக பேசி பேசி தான் நம்மை எமாற்றினார். புலிகளின் ரகசியத்தை ராஜபக்சேவிடம் கூறிய பிரபாகரனின் முன்னாள் தளபதி கருணாவிற்கும், புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் வாக்குமூலம் கொடுத்த சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கையில் அதிகாரம் வரும் முன்பே சீமான் மீது கற்பழிப்பு, நிதி மோசடி, நம்பிக்கை துரோகம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒருவேளை பதவிக்கு வந்தால்?
தொண்டர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், கட்சியின் கொள்கை எவ்வளவு உயர்ந்தது என்றாலும் தலைவர்கள் நல்லவர்கள் இல்லை என்றால் எல்லாம் வீண்தான். திமுக தொண்டர்கள் பலர் தமிழுக்காக மொழிப்போராட்டத்தில் உயிரையே கொடுத்தனர். ஆனால் கருணாநிதி அதன் தலைவர் ஆனதால் தான் திமுக இந்த நிலையை அடைந்துள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் இனத்துக்காக தனது உயிரை மட்டுமின்றி தனது குடும்பத்தையே இழந்த தலைவர் பிரபாகரனுக்கு துரோகம் செய்தவரை எப்படி தலைவராக ஏற்க முடியும்.
கடைசியாக சீமானுக்கு சில கேள்விகள்:
1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?
2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)
3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
4.நாம் தமிழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி மேடையில் உணர்ச்சி பொங்க பேசி தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்
சிறு விளக்கம்:
மேலே உள்ள எனது கட்டுரைக்கு பதிலாக ஆதாரமே இல்லாமல் ஏகப்பட்ட பொய்களை கொண்டு ஒரு கட்டுரையை எழுதி சீமானின் கட்சியினர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் எழுதிய அந்த கட்டுரைக்கு நான் எழுதிய பதில் கட்டுரை
http://faithfulltamailan.blogspot.in/2017/03/blog-post.html
சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பறிமாரி இருக்கின்றனர் - அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தம்பிமார்கள் எது நிகழக் கூடாது என்று முப்பாட்டன் மாயோனை வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்த துன்பியல் சம்பவம் நிகழ்ந்தே விட்டது. அண்ணன் சீமான் ஏற்கனவே போட்டுடைத்த ஃபர்னிச்சர்களான அ.க 74, ஆமைக் கறி, அரிசிக் கப்பல், ஆமை ஓட்டுப் படகு வரிசையில் பொட்டு அம்மானையும் புதிய ஃபர்னிச்சராக சேர்த்துள்ளார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கம் போல் பல அரியவகை கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். இப்போது புதிதாக தெறித்து விழுந்துள்ள அடேங்கப்பா வகை தத்துவங்களுக்கு முட்டுக் கொடுத்து களமாட தம்பிமார்கள் முகநூல் நோக்கி விரைந்துள்ளனர்.
அண்ணனின் தத்துவங்கள் அனைத்துமே மிகவும் எளிமையானவை. “எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.
சுருக்கமாக “அனைத்து உயிர்களுக்குமான” அரசியலை தங்கள் அண்ணன் முன்வைக்கிறார் என்பது தம்பிமார்கள் மேற்படி தத்துவங்களுக்கு அளிக்கும் விளக்கம். வாட்சப் நிலைத் தகவல்களின் மூலமாகவும், முகநூல், ட்விட்டர் மற்றும் யுட்யூப் கமெண்டுகளின் மூலமாகவும் உக்கிரமாக சுவிசேஷ நற்செய்தியை பரப்பும் தம்பிமார்கள், எல்லா உயிர்களுக்குமான தமது அக்மார்க் அரசியலை ஏற்காதவர்களை “அடேய் கொல்டி வந்தேறிகளா” என அன்போடு வாழ்த்துவது வழக்கம்.
தம்பிமார்கள் எதிர்கொள்ளும் மாபெரும் அரசியல் நெருக்கடியே அண்ணன் அவ்வப் போது “வெட்டிருவேன் – குத்தீருவேன்” பாணி அனைத்து உயிர்களுக்குமான அரசியலில் இருந்து ஈழத்தில் கரையேறும் சந்தர்ப்பங்கள் தாம்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் தான் மேலே குறிப்பிட்ட நிகழ்வின் போது அண்ணன் நிகழ்த்திய உரை. நிகழ்வில் அண்ணன் பேசியதில் முக்கியமான பகுதியைக் கேட்டு விடுவோம் :
“ஒருமுறை அண்ணன் பொட்டு அம்மன் வீட்டில் சாப்பிடச் சென்றோம். நானும், பொட்டு அம்மன், அண்ணி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு இட்லி, தோசை, சாம்பார், சட்னி எடுத்து வைத்தனர். உணவைப் பார்த்துவிட்டு இட்லியா என்று கேட்டேன். உடனே பொட்டு அம்மனும், அண்ணியும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஏன் சிரிக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு பொட்டு அம்மன், ஒரு வாரம் பார், அவன் தோசை இட்லிக்கு வந்துவிடுவான் என தலைவர் பிரபாகரன் அவரிடம் சொன்னதாகச் சொன்னார். நானே ராமநாதபுரத்துக்காரன். காரம் அதிகம் சாப்பிடுபவன். நம்மை விட அவர்கள் அதிகமாக காரம் சாப்பிடுகின்றனர் என்று நினைத்தேன். ஒரு முறை தலைவருடன் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் அருமையானது.
தலைவரும் நானும் காட்டிலுள்ள ஒரு அறையில் சாப்பிட்டோம். அப்போது, ஒவ்வொரு உணவாக காண்பித்து இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கான தயாரிப்புகளுக்கு டைரக்ஷன் செய்ததும் தான்தான் என்று சொன்னார்” எனப் பேசியுள்ளார் சீமான்.
“ஒரு மணி நேரம் எங்கண்ணன் காட்டுக் கத்து கத்தியும், சோத்து மேட்டரை மட்டும் பிடித்துத் தொங்கினால் எப்படி?” என்று நாதக தம்பிமார்கள் மனங்கோணி விடக் கூடாது. கடந்த பத்தாண்டுகளில் அண்ணன் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருந்தாலும் எல்லா மேடைகளிலும் “புஹாஹாஹா” “வாய்ப்பில்ல ராஜா” “தொலைச்சிபுருவேய்ன்” “பிச்சிப்புருவேய்ன்” “கிழிச்சிப்புருவேய்ன்” “அடிச்சிப்புருவேய்ன்” “தீர்த்துப்புருவேய்ன்” “கொண்டேடேடே….புருவேய்ன்” போன்ற வழக்கமான தத்துவங்களையே வெளிப்படுத்தி வருகின்றார். இடைக்கிடையே அண்ணன் முன்வைக்கும் இது போன்ற சைடுடிஷ்கள் தான் நமக்கு சுவாரசியமூட்டுகின்றன.
மேற்படி பேச்சுக்கு தம்பிமார்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். மண்டையில் மூளை என்கிற வஸ்து இருக்கிறவர்களால் எப்படி இதற்கெல்லாம் கைதட்ட முடியும் என்கிற சந்தேகம் சமீப நாட்கள் வரை நமக்கும் இருந்தது; ஆனால் இந்த தம்பியின் பராக்கிரமத்தை படித்த பின் அந்த சந்தேகம் நீங்கியது.

போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பறிமாரி இருக்கின்றனர் - அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தம்பிமார்கள் எது நிகழக் கூடாது என்று முப்பாட்டன் மாயோனை வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்த துன்பியல் சம்பவம் நிகழ்ந்தே விட்டது. அண்ணன் சீமான் ஏற்கனவே போட்டுடைத்த ஃபர்னிச்சர்களான அ.க 74, ஆமைக் கறி, அரிசிக் கப்பல், ஆமை ஓட்டுப் படகு வரிசையில் பொட்டு அம்மானையும் புதிய ஃபர்னிச்சராக சேர்த்துள்ளார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கம் போல் பல அரியவகை கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். இப்போது புதிதாக தெறித்து விழுந்துள்ள அடேங்கப்பா வகை தத்துவங்களுக்கு முட்டுக் கொடுத்து களமாட தம்பிமார்கள் முகநூல் நோக்கி விரைந்துள்ளனர்.
அண்ணனின் தத்துவங்கள் அனைத்துமே மிகவும் எளிமையானவை. “எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.
சுருக்கமாக “அனைத்து உயிர்களுக்குமான” அரசியலை தங்கள் அண்ணன் முன்வைக்கிறார் என்பது தம்பிமார்கள் மேற்படி தத்துவங்களுக்கு அளிக்கும் விளக்கம். வாட்சப் நிலைத் தகவல்களின் மூலமாகவும், முகநூல், ட்விட்டர் மற்றும் யுட்யூப் கமெண்டுகளின் மூலமாகவும் உக்கிரமாக சுவிசேஷ நற்செய்தியை பரப்பும் தம்பிமார்கள், எல்லா உயிர்களுக்குமான தமது அக்மார்க் அரசியலை ஏற்காதவர்களை “அடேய் கொல்டி வந்தேறிகளா” என அன்போடு வாழ்த்துவது வழக்கம்.
தம்பிமார்கள் எதிர்கொள்ளும் மாபெரும் அரசியல் நெருக்கடியே அண்ணன் அவ்வப் போது “வெட்டிருவேன் – குத்தீருவேன்” பாணி அனைத்து உயிர்களுக்குமான அரசியலில் இருந்து ஈழத்தில் கரையேறும் சந்தர்ப்பங்கள் தாம்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் தான் மேலே குறிப்பிட்ட நிகழ்வின் போது அண்ணன் நிகழ்த்திய உரை. நிகழ்வில் அண்ணன் பேசியதில் முக்கியமான பகுதியைக் கேட்டு விடுவோம் :
“ஒருமுறை அண்ணன் பொட்டு அம்மன் வீட்டில் சாப்பிடச் சென்றோம். நானும், பொட்டு அம்மன், அண்ணி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு இட்லி, தோசை, சாம்பார், சட்னி எடுத்து வைத்தனர். உணவைப் பார்த்துவிட்டு இட்லியா என்று கேட்டேன். உடனே பொட்டு அம்மனும், அண்ணியும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஏன் சிரிக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு பொட்டு அம்மன், ஒரு வாரம் பார், அவன் தோசை இட்லிக்கு வந்துவிடுவான் என தலைவர் பிரபாகரன் அவரிடம் சொன்னதாகச் சொன்னார். நானே ராமநாதபுரத்துக்காரன். காரம் அதிகம் சாப்பிடுபவன். நம்மை விட அவர்கள் அதிகமாக காரம் சாப்பிடுகின்றனர் என்று நினைத்தேன். ஒரு முறை தலைவருடன் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் அருமையானது.
தலைவரும் நானும் காட்டிலுள்ள ஒரு அறையில் சாப்பிட்டோம். அப்போது, ஒவ்வொரு உணவாக காண்பித்து இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கான தயாரிப்புகளுக்கு டைரக்ஷன் செய்ததும் தான்தான் என்று சொன்னார்” எனப் பேசியுள்ளார் சீமான்.
“ஒரு மணி நேரம் எங்கண்ணன் காட்டுக் கத்து கத்தியும், சோத்து மேட்டரை மட்டும் பிடித்துத் தொங்கினால் எப்படி?” என்று நாதக தம்பிமார்கள் மனங்கோணி விடக் கூடாது. கடந்த பத்தாண்டுகளில் அண்ணன் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருந்தாலும் எல்லா மேடைகளிலும் “புஹாஹாஹா” “வாய்ப்பில்ல ராஜா” “தொலைச்சிபுருவேய்ன்” “பிச்சிப்புருவேய்ன்” “கிழிச்சிப்புருவேய்ன்” “அடிச்சிப்புருவேய்ன்” “தீர்த்துப்புருவேய்ன்” “கொண்டேடேடே….புருவேய்ன்” போன்ற வழக்கமான தத்துவங்களையே வெளிப்படுத்தி வருகின்றார். இடைக்கிடையே அண்ணன் முன்வைக்கும் இது போன்ற சைடுடிஷ்கள் தான் நமக்கு சுவாரசியமூட்டுகின்றன.
மேற்படி பேச்சுக்கு தம்பிமார்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். மண்டையில் மூளை என்கிற வஸ்து இருக்கிறவர்களால் எப்படி இதற்கெல்லாம் கைதட்ட முடியும் என்கிற சந்தேகம் சமீப நாட்கள் வரை நமக்கும் இருந்தது; ஆனால் இந்த தம்பியின் பராக்கிரமத்தை படித்த பின் அந்த சந்தேகம் நீங்கியது.

குறிப்பு: யாராது சம்பந்தப்பட்ட தம்பியிடம் பைக்குகளுக்கெல்லாம் சுங்கம் வசூலிப்பதில்லை என்பதைச் சொல்லி விரைப்பாய் உயர்த்தி வைத்துள்ள அவரது தோள்களை தளர்த்தச் சொல்வது நல்லது. தொடர்ந்து தோளை உயர்த்தியே வைப்பதால் ஸ்பாண்டிலிட்டிஸ் வர வாய்ப்புள்ளது.
மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் அண்ணனின் உரைவீச்சில் சில விசயங்கள் சூசகமாக சொல்லப்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
எப்போது அண்ணன் சர்ஜிகல் தாக்குதல் செய்தாலும் அதை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் பிற்காலத்தில் அண்ணன் அதை விவரிக்கும் போது உயிரோடு இருக்க மாட்டார்கள். உதாரணமாக, கலைஞரின் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அண்ணன் எழுதிய அழகை அவரே விவரித்த போது கலைஞர் இறந்து போயிருந்தார். அதே மாதிரி அண்ணன் எழுதிய திரைக்கதையைக் கண்டு சிவாஜி அசந்து போன சம்பவத்தை அண்ணன் உலகுக்கு அறிவித்த போது சிவாஜி இறந்து பத்தாண்டுகள் கழிந்திருந்தன. ஆமைக் கறி, அரிசிக் கப்பல் மகாத்மியங்களை அண்ணன் எடுத்துரைத்த போது பிரபாகரனும் இல்லை.
இப்போது பொட்டு அம்மான் விசயத்துக்கு வருவோம் – இறுதிப் போரில் பொட்டு அம்மான் “எப்படியோ” தப்பி விட்டதாகவும் “எங்கோ” இருந்து அவர் இயக்கத்தை வழிநடத்தி வருவதாகவும் தம்பிமார்கள் சொல்வதுண்டு. இப்போது அண்ணன் பொட்டு அம்மான் வீட்டில் இட்லியோடு நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலை ஊருக்கு சொல்லி விட்டதால் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அண்ணனின் இதர சாட்சியங்களின் படி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து, போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பரிமாறி இருக்கின்றனர் – அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி தனது முக்கிய தளபதிகளையும் அண்ணன் வாழை இலையின் முன் செய்திட்ட ஊடறுப்புத் தாக்குதல்களுக்கு தோள் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அங்கே கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டு புலி போராளிகள் வரிசையாக கொத்து குண்டுகளுக்கு வீழ்ந்து கொண்டிருந்த போது தலைவர் பிரபாகரன் குழம்புக் குண்டானின் முன் குத்த வைத்து அமர்ந்து ஆமைக்கறி சரியான பதத்தில் வெந்துள்ளதா என குத்திக் குத்திப் பார்த்துள்ளார். போர்க்களத்தில் எப்படி விருந்துப் பந்தி என்று ஆத்திரப்படுவோர் அண்ணன் சீமானிடம்தான் அந்த பந்தி புரூடாக்களை கேட்க வேண்டும்.
இறுதி போர்கட்டத்திலே புலிகள் சாம்பார், கூட்டு, பொறியல் செஞ்சாங்க, கறி வறுத்து தந்தாங்க, ஆமை கறி திண்ணாங்க. நான் திங்கிறதை ஒருத்தங்க நோட்ஸ் எடுத்து அண்ணனுக்கு சொன்னாங்க...
போராட்ட களத்தை கேலிகூத்தாக்கும் சீமான். புலிகளை கேவலபடுத்த இவன் ஒருத்தன் போதும்..
மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் அண்ணனின் உரைவீச்சில் சில விசயங்கள் சூசகமாக சொல்லப்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
எப்போது அண்ணன் சர்ஜிகல் தாக்குதல் செய்தாலும் அதை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் பிற்காலத்தில் அண்ணன் அதை விவரிக்கும் போது உயிரோடு இருக்க மாட்டார்கள். உதாரணமாக, கலைஞரின் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அண்ணன் எழுதிய அழகை அவரே விவரித்த போது கலைஞர் இறந்து போயிருந்தார். அதே மாதிரி அண்ணன் எழுதிய திரைக்கதையைக் கண்டு சிவாஜி அசந்து போன சம்பவத்தை அண்ணன் உலகுக்கு அறிவித்த போது சிவாஜி இறந்து பத்தாண்டுகள் கழிந்திருந்தன. ஆமைக் கறி, அரிசிக் கப்பல் மகாத்மியங்களை அண்ணன் எடுத்துரைத்த போது பிரபாகரனும் இல்லை.
இப்போது பொட்டு அம்மான் விசயத்துக்கு வருவோம் – இறுதிப் போரில் பொட்டு அம்மான் “எப்படியோ” தப்பி விட்டதாகவும் “எங்கோ” இருந்து அவர் இயக்கத்தை வழிநடத்தி வருவதாகவும் தம்பிமார்கள் சொல்வதுண்டு. இப்போது அண்ணன் பொட்டு அம்மான் வீட்டில் இட்லியோடு நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலை ஊருக்கு சொல்லி விட்டதால் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அண்ணனின் இதர சாட்சியங்களின் படி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து, போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பரிமாறி இருக்கின்றனர் – அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி தனது முக்கிய தளபதிகளையும் அண்ணன் வாழை இலையின் முன் செய்திட்ட ஊடறுப்புத் தாக்குதல்களுக்கு தோள் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அங்கே கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டு புலி போராளிகள் வரிசையாக கொத்து குண்டுகளுக்கு வீழ்ந்து கொண்டிருந்த போது தலைவர் பிரபாகரன் குழம்புக் குண்டானின் முன் குத்த வைத்து அமர்ந்து ஆமைக்கறி சரியான பதத்தில் வெந்துள்ளதா என குத்திக் குத்திப் பார்த்துள்ளார். போர்க்களத்தில் எப்படி விருந்துப் பந்தி என்று ஆத்திரப்படுவோர் அண்ணன் சீமானிடம்தான் அந்த பந்தி புரூடாக்களை கேட்க வேண்டும்.
இறுதி போர்கட்டத்திலே புலிகள் சாம்பார், கூட்டு, பொறியல் செஞ்சாங்க, கறி வறுத்து தந்தாங்க, ஆமை கறி திண்ணாங்க. நான் திங்கிறதை ஒருத்தங்க நோட்ஸ் எடுத்து அண்ணனுக்கு சொன்னாங்க...
போராட்ட களத்தை கேலிகூத்தாக்கும் சீமான். புலிகளை கேவலபடுத்த இவன் ஒருத்தன் போதும்..
https://twitter.com/i/status/1199347280572080130
அண்ணன் சீமான் சொல்லும் சம்பவங்கள் உண்மை என்று “உளப்பூர்வமாகவே” நம்பித் தான் இதையெல்லாம் ஊகிக்கின்றோம். மேலும் தொடர்வோம்,
அதே கூட்டத்தில் சீமான் சொல்கிறார்:
“சுற்றிலும் ஷெல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒருத்தன் சாப்பிடுறேன். பின்னாடி ஒருவர் நின்று எழுதிக் கொண்டிருக்கிறார். என்னடா எழுதறான் என்று முதல் நாள் விட்டுட்டேன். இரண்டாவது நாள் அதை வாங்கிப் பார்த்தேன். ‘இந்த சம்பலைத் இரண்டு முறை தொட்டார். இந்த கூட்டை முழுக்க சாப்பிட்டார், இந்த கறியை தொடவில்லை. சாம்பார் ஊற்றிக் கொண்டார்’. என்று எழுதிக் கொண்டிருந்தார். ஏனப்பா இதை எழுதுகிறாய் என்று கேட்டேன். இல்லைங்க தலைவருக்கு அனுப்பனும்னு சொன்னார்”
இதில் பல குறியீடுகள் உள்ளதை நீங்களே கவனித்திருப்பீர்கள். போர் உச்சத்தில் இருந்த போது, புலிகள் களத்தில் பின்டைவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்து கொண்டிருந்த போது – சீமான் எந்த சம்பலை தொட்டார், எந்த ஊறுகாயை ருசித்தார், எந்த சாம்பாரை மோந்து பார்த்தார் என்பதை கணக்கெடுக்க ஒரு புலிப் போராளியை டெபுடேசனில் டியூட்டி போட்டுள்ளனரோ என்றே தோன்றுகிறது. இதை வக்கிரம் என்போர் அண்ணன் சீமானிடம் அன்பாக கேட்டுப் பாருங்கள். தாளித்து விடுவார்.
விருந்தோம்பல் என்னவோ பிரமாதமாகத் தான் உள்ளது – ஆனால், இப்படி எத்தனை பருக்கை உள்ளே போனது எத்தனை பருக்கை சிதறிப் போனது என்பதை கணக்கெடுப்பதெல்லாம் போராளி வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் என்பதை நினைத்தால் தான் திடுக்கென்று இருக்கிறது. இதில் உச்சகட்டமாக மறு நாள் காலை அண்ணன் கொல்லைக்கு போவதற்கு புலிப் போராளிகள் பாடிகார்டாய் போய் வந்ததாக அண்ணன் அடித்து விட்டாலும் அதை நம்புவதற்கு நாதக தம்பிமார்கள் தயாராகவே இருக்கிறார்கள். இருப்பினும் அண்ணன் சீமான் ஆய் போன கதைகளை இன்னும் சொல்லவில்லை – சொல்லி இருந்தால் அதை ஜீரணிக்கும் நிலையில் நாமும் இல்லை.
மற்றொரு விசயமும் உள்ளது. சுற்றிலும் ஷெல் அடித்தார்கள், பத்து ஷெல்லுக்கு ஒன்று எனக் கணக்கு வைத்தாலும் நாள்தோறும் சில பத்து பேராவது மாண்டு போயிருக்க வேண்டும். பலருக்கு கை வேறாய் கால் வேறாய் உடல் சிதைந்து போயிருக்க வேண்டும் – இத்தனை களேபரத்துக்கும் இடையில் ஒரு ஜீவன் ரவுண்டு கட்டி ரசித்து ரசித்து சாப்பிட்டிருக்கிறது என்றால் அது சாதாரண ஜீவனாக இருக்க முடியுமா? பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம், வெற்றி தோல்வி என இகலோக கர்மாக்கள் அனைத்தையும் சம்சார சாகரத்தையும் கடந்த ஒரு பரஜீவனாகத் தான் இருக்க வேண்டும்; அதைத்தான் ஆதிசங்கரனின் அத்வைதம் பரமாத்மா என்கிறது. சுத்த தமிழில் பம்முற ஆத்துமா என்றும் சொல்லலாம்.
இதில் ஒரே ஒரு விசயம் மட்டும் தான் நெருடலாக உள்ளது. அண்ணன் சீமானுக்கு பிரபாகரன் அ.க74 துப்பாக்கியால் சுடும் பயிற்சியை அளித்துள்ளார். பயிற்சிக்காக ஒரு ஆஸ்திரேலிய அரிசிக் கப்பலையே தாரை வார்த்துள்ளார். அப்படி ஒரு கப்பலையே துல்லியமாக தாக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற சீமான், சுற்றிலும் குண்டுகளைப் போட்டு மக்களைக் கொன்று கொண்டிருந்த சிங்களனிடம் சமர் புரிந்து அவன் தலையை தரையில் உருட்டியிருக்க வேண்டும்; ஆனால், அண்ணன் சப்பளாங்கால் போட்டமர்ந்து இட்டிலியை உருட்டி விளையாடியது ஏன் என்பது மட்டும் புரியவில்லை.
அடுத்த கூட்டத்தில் அதை விளக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
– அ.ர். துரை
ஆதாரங்கள்:
1. புதிய தலைமுறை, நியூஸ் 18 ஆகியவற்றுக்கு அளித்த சீமான் பேட்டிகள்.
2. நாம் தமிழர் கட்சியின் இணைய தளம்
3. You tubeஇல் உள்ள அவருடைய பேச்சுகளின் வீடியோக்கள்
4. திராவிடத்தால் வீழ்ந்தோம்
5. United Nation's briefing on ethnic cleansing and xenophobia
- Get link
- X
- Other Apps

இந்த blog யை எழுதிய பரதேசிக்கு என் பதில் 50 வருடமாக திராவிடம்,தேசியம் என்று நீ செய்த திருட்டு தனம் மொள்ளமாரி தனம் இவற்றை எதிர்க்க ஒருவன் வந்தான் பாரு அது தான் தமிழ் தேசிய வெற்றி ....இப்படி நீ blog போட்டே கதறிக்கிட்டு சாவு .....அப்படியே 3 பொண்டாட்டி கருணாநிதி,ஊழல்வாதி ஜெயலலிதா ,குடும்ப அரசியல்,இப்படி ஆயிரகணக்கான கேள்விக்கு நீ பதில் எடுத்து வெய் ட வெண்ணை.
ReplyDelete