தமிழகத்தில் ஆலைய நுழைவுப் போராட்டம் குறித்த விவாதத்தைத் துவங்குகிற அனைவரும் வைத்தியநாத ஐயர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றார் என்றே துவங்குவார்கள்.
யார் அந்த வைத்தியநாத ஐயர் என்று தேடினால்தான் இவரை எல்லோரும் வலிந்து வரலாற்றில் நாயகனாக மாற்றுவதன் காரணம் புரியும்.
யார் அந்த வைத்தியநாத ஐயர்?
சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில், பார்ப்பன சாதியைச் சேர்ந்த சிறுவர்களோடு மற்ற சாதிச் சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம் என காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தவுடன் காங்கிரஸ் காரிய கமிட்டியிலிருந்து விலகியவர் தான் வைத்தியநாத ஐயர் என்பது மறைக்கப்பட்ட வரலாறு.
இந்த சனாதனவாதி எப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார் என்ற சந்தேகம் வந்தால்தான் ஆலைய நுழைவு போராட்டத்தின் உண்மையான நாயகர்கள் தந்தை பெரியாரும் திராவிட இயக்கத்தினரும் என்பது தெரியவரும்.
தந்தை பெரியார்தான் 1922-ம் ஆண்டு திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு – பொதுஉரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டுவந்தவர். அப்பொழுது அதை எதிர்த்தவர்தான் வைத்தியநாதன்.
காந்தியும், ராஜாஜியும் நிராகரித்த வைக்கத்திற்கு பெரியார் சென்றார்
வைக்கம் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட்பட தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை இருந்தது. இத்தகைய தடை கேரளம் முழுவதும் அளாவியது. இத்தடையை நீக்கி அவ்வீதியில் நடக்க உரிமை வேண்டி நிகழ்ந்த சத்தியாகிரகமே வைக்கம் போராட்டம். வைக்கம் போராட்டம். ஈழவர் தலைவர் டி.கே.மாதவனும், காங்கிரஸ் தலைவர்கள் கே.பி.கேசவ மேனனும், ஜார்ஜ் ஜோசப்பும் தலைமை தாங்கினர்.
1924 மார்ச் 30 அன்று தொடங்கிய போராட்டம் ஏப்ரல் முதல் வாரத்திலேயே தன் போராளிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டு தலைவர்களின்றி தத்தளித்து நின்றது. வழிநடத்தும் தலைவர்களைக் கேட்டு காந்தி, ராஜாஜிக்கும், அவரையே வரும்படி வேண்டி பெரியாருக்கும் ஜார்ஜ் ஜோசப் எழுதினார். முதல் இருவரும் கோரிக்கையை நிராகரித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான பெரியாரோ கேரள அழைப்பை ஏற்று வைக்கம் சென்றார்.
முன்னின்றார். அதற்கு அடுத்த நாளே பெரியார் கோவை சென்று விடுகிறார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை பெரியாரின் தளபதி குத்தூசிகுருசாமி முன்னின்று நடத்திக் காட்டினார்.
பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சை மேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு திருநீறு பூசச் செய்து தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டோடு ஈரோட்டின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்று கோட்டை ஈசுவரன் கோவிலுக்குள் நுழைந்துவிட்டார்.
குத்தூசி குருசாமி தனது தோழர்களுடன் கோவிலுக்குள் நுழைந்ததும் பார்ப்பனர்கள் செய்தியை ஊருக்குள் பரப்பி பெரும் கூட்டத்தைக் கூட்டி தோழர்களை கோவிலுக்கு உள்ளேயே வைத்து வெளிக்கதவை இழுத்துப் பூட்டி விட்டனர்.
இரண்டு நாட்கள் பூட்டிய கதவைத் திறக்க மறுத்துவிட்டனர். இரண்டு நாட்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.
இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21.4.1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி, கருப்பன் ஆகியோருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை சென்றார். ”ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர் ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம்பெறும்” என்று குடியரசில் எழுதினார்கள்.
கோயில் நுழைவு உரிமைக்காக சுப்பராயன் முன்வைத்த சட்டவரைவு
31.1.1933 அன்று டாக்டர் சுப்பராயன், சென்னை சட்டமன்றத்தில் கோயில் நுழைவு உரிமைக்கான சட்டவரைவு ஒன்றைக் கொண்டு வந்தார். அப்போது சுப்பராயன் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. “சுப்பராயன் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால், நீதிக்கட்சியினர் இதை ஆதரிக்காமல் விட்டுவிடக் கூடாது. இம்மசோதாவை கட்டாயம் ஆதரிக்க வேண்டும்” என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் எழுதினார்.
இம்மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் ரெட்டமலை சீனிவாசன் உட்படப் பலரும் பேசினர். மசோதாவுக்கு ஆதரவாக 56 வாக்குகளும், நடுநிலையாக 19 வாக்குகளும் பதிவாயின. எதிர்ப்பு என்பதே இல்லை. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு வைசிராய் ஒப்புதல் கொடுக்காத காரணத்தால் இது சட்டமாக்கப்படவில்லை.
இத்தனை பெரும் போராட்டத்தை ஆலய நுழைவிற்காக நிகழ்த்தியது தந்தை பெரியாரும் அவரது திராவிடர் இயக்கமும். அதன் காரணமாக மக்களிடம் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்ட காரணத்தால், வேறு வழியின்றி தேர்தல் காரணங்களுக்காக வைத்தியநாத ஐயர் போட்ட நாடகத்தை வரலாறாக சாதனையாக மாற்றகிறார்கள்.
அனைவரும் ஆலைய நுழைவு என்பது திராவிட இயக்கம் வென்ற களங்களில் ஒன்று.
இவன்
துரை...
Comments
Post a Comment